ஹஜ் சென்ற, இலங்கை பெண் வபாத் - ஜனாஸா மக்காவில் நல்லடக்கம்
புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கு உயிரிழந்துள்ளார். திடீர் சுகவீமுற்ற நிலையில் புனித மக்கா நகரில் உள்ள மலிக் பைஸால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் நேற்றுக் -29- காலை மரணமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், புதிய காத்தான்குடி பதுரியா வீதி, மில்லத் லேனில் வசிக்கும் நாகூர் சித்தி நபூரா (39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை மக்காவில் இடம்பெற்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இவர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரீபின் இளைய சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்
انالله وانااليه راجعون
ReplyDelete