Header Ads



கண்டியில் அந்த, முஸ்லிம் செயல்வீரன் யார்..?

கல்லெறிந்ததன் பின்னர் யாருமில்லை என உறுதி செய்த பின் வீடுகளுக்குள் புகுந்து சூரையாடிய பின் தீ வைக்கும் காடையர் கூட்டங்களுக்கு நாம் ஊருக்குள்ளேயே(கண்டி) இல்லையென ஊரையையே உங்களுக்கு அர்ப்பணிக்கின்றோம் என்பது போல் இருக்கிறது கண்டி ஜம்மியத்துல் உலமா கிளையின் கடிதம்.

ஞானசாரயின் அழுத்கம பொதுக்கூட்டத்தின் பின்னர் அழுத்கம அழிந்தது.திகனைக் கூட்டத்தின் பின்னர் திகனையழிந்தது.அதே போன்று 7ம் திகதி கண்டி பொது கூட்டத்தின் பின்னர் எதுவென்றாலும் நடக்கலாம் இதனை விபரித்து பொலிசில் ஒரு முறைப்பாட்டை நான் செய்வதற்கு முன் முந்திக்கொள்ளும் அந்த முஸ்லிம் செயல்வீரன் யார்?

சட்டத்தரணி A.M.M. சறூக்.

9 comments:

  1. அது என்னடா? ஆ .. ஊ ன்னா எல்லாரும் ஜம்இய்யாவுக்கு ஏசுறிங்க ?

    இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம் நீதிபதிகளும் அல்லது சட்டத்தரணிகளும் அல்லது mp மார்களும் அல்லது எந்த அமைப்பும் முன் வந்து கோட்ல கேஸ் போடலாமே !?

    ஓ ... ரைட் பணம் கொடுத்தால் செய்வாங்களோ ?

    சட்டத்தரணிகள் சங்கம் முடிந்தால் செய்ய வேண்டியது தானே !

    அதற்கேன் நோன்பு பிடியுங்கள் துஆக்களில் ஈடுபடுங்கள் என்று வழி காட்டிய ஜம்இய்யாவை சாட வேண்டும் ?

    ReplyDelete
  2. சட்டத்தரணி amm சறூக் அவர்களே ! உங்கள் சமூக சேவை போற்றத்தக்கது !

    அதேநேரம் சில்லித்தனமான இது போன்ற பதிவுகளை தவிர்ந்து கொள்ளுங்கள் .

    ஜம்இய்யதுல் உலமா என்பது அரசாங்கமோ, அரசியல் கட்சியோ , mp மார்களோ இல்லை ! அது மார்க்கம் சார்ந்த விடயங்களுக்காக உள்ளது .

    அவர்களும் சாதாரணமான பொது மக்கள்தான் . ஜம்இய்யாவுக்கு என்று தனி அதிகாரம் எதுவுமில்லை .

    இருப்பினும் மக்கள் பிரதிநிதிகளான அரசியல் தலைவர்கள் செய்யாததை முடிந்தளவு செய்கின்றனர் .

    நீங்கள் தௌஹீத் வாதியாக இருப்பதால் சாமானிய தௌகாரன் acju வை வெளியில் நின்று விமர்சிப்பது போன்று

    நீங்களும் அதற்கு கை கொடுக்காமல் விமர்சனம் செய்வது சமூகத்தின் மீது உள்ள உங்கள் அக்கறையின் வீதத்தை காட்டுகின்றது !

    ReplyDelete
  3. சட்டத்தரணிகள் சங்கம் முடிந்தால் செய்ய வேண்டியது தானே !

    அதற்கேன் நோன்பு பிடியுங்கள் துஆக்களில் ஈடுபடுங்கள் என்று வழி காட்டிய ஜம்இய்யாவை சாட வேண்டும் ?

    ReplyDelete
  4. INDA NAATTILAEI ORU ARASHAANGAM
    IRUKKIRAZA ?.
    NEETHIYA HA SAAMAYA AMAICHAR
    IRUKKIRANA.?
    AWASHARAHAALA SHATTAM AMULIL
    ULLAZU.
    INDA NAATTILEI NADAPPAZU
    SHARWAZIHARA, THUVESHA, NAASHAHAARACHEYAL.

    PAAWAM MUSLIMGAL, EMAANDU
    KONDEI IRUKKIRARHAL.

    ReplyDelete
  5. ins bro சட்டத்தரனி சருக் அவர்களின் என்ன தவறு கண்டீர்கல்.3 பதிவுகள்.ஆனால் தமிழ் பாசிச வாதிகள் எமது சமூகத்துக்கு எதிராக இடும் பதிவுகளுக்கு வாய் மூடி இருப்பீர்கள்.ஜம்மியத்துல் உலமா இவ்வளவு காலமும் தூங்கிவிட்டு இப்போ சில மாதங்களாக விழித்துல்லார்கல். அவர்க எப்போவோ விழிப்புடன் இருந்திருந்தால் இந்தளவுக்கு நிலமை மோசமாக இருந்திருக்காது.( நான் thowheeth வாதி அல்ல.thowheeth க்கு எதிராக இந்த தளத்தில் அதிகம் பதிவிட்டவன்) எனவே அன்னியர்கலின் பதிவுக்கு வாய் மூடி ஊமைகளாக இருக்கும் நீங்கள் சமூகத்துக்காக இரவு பகல் பாரது எந்த வித பணத்தை எதிர் பாராது சேவையாற்றும் ஒரு நல்ல மனிதரின் கருத்துக்கு எதிராக பதிவிடுவது முறையல்ல.ஆரம்பத்தில் இந்த பக்கத்தில் சில இனவாதிகல் எமக்கெதிராக பதிவிடும் போது பலர் அவர்களுடன் சமரசமான முறையில் பதிவிட்டார்கல்.ஆனால் அதை தாங்க முடியாமல்தான் அந்த இனவாதிகலுக்கு எதிராக நான் கடந்த ஆறு மாதமாக பதிவிட ஆரம்பித்தேன்.மாசா அல்லாஹ் இப்போது பல சகோதரர்கள் இனவாதிகலுக்கு நல்ல பதிலடி கொடுக்கிறார்கள்.இது போல் பேசாமல் இருந்து விட்டு எடுத்த எடுப்பில சமூகத்துக்காக பாடு படும் நபர்களை விமர்சிப்பதை தவிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  6. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்பது முஸ்லிம்களின் எல்லா விடயங்களிலும் ஈடுபட்டு தீர்வை பெற்று தரத்தான் உருவாக்கி உள்ளார்கள்.தனி மனிதர்கள் முன்வர பயப்படுவார்கள் காரணம் அவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு.அதிலும் சில பேர் தைரியமாக முன்வருவது பாராட்டுக்குரியது.குனுதோத சொல்வதும் ,பிறைபார்பதும் மாத்திரம் அல்ல.அவர்கள்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு பெற்றுதரவேண்டியவர்கள் அதற்காகத்தான் இப்படியொரு ஜமாத்தை உருவாக்கி வைத்துள்ளர்கள்.மார்க்கவிடயம் மாத்திரம் என்றால் ஊரிலுள்ள மவ்லவி மார்களிடம் அறிந்து கொள்ளலாம்.இப்படியான பிரசினைககளை உலமாசபைதான் அரசாங்கத்திடமோ,சம்பந்தப்பட்டவர்களிடமோ பேசி தீர்வை பெற்றுத் தர வேண்டும்.

    ReplyDelete
  7. ya Allah ACJU wukku porumaiyayum thairiyaththayum koduththarulwayaga

    ReplyDelete
  8. சகோ. ரிஷாத்... ஜம் இய்யதுல் உலமா தூங்கிக்கிட்டு இருந்துச்சா இல்ல நீங்க தூங்கி இப்போ தான் எழும்பி இருக்கின்றீர்களா என்ற பெருத்த சந்தேகம் வருது. அவர் சமூகத்துக்காக பாடு பட்டார் என்றால் அதற்கான கூலியை பெற்றுக்கொள்ளுவார். அதில் சந்தேகம் இல்லை. அதற்காக அவர் கருத்தை ஆமோதிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. ஜம் இய்யத்துல் உலமாவின் கடிதத்திற்கும் இவரின் விமர்சனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மற்றது ஜம் இய்யத்துல் உலமா எது செய்ய வேண்டுமோ அதை சரியாக நிதானமாக செய்து கொண்டு இருக்கின்றது. சரூக் அவர்கள் ஒரு சட்டத்தரனி மற்றும் நீங்கள் சொல்லுவது போல் ஒரு சமூக சேவகர் என்றால் அவருக்கு தாராளமாக வழக்கோ அல்லது புகாரோ கொடுக்கலாம். சும்ம வாய் சவாடல் விடாமல் பிரயோசனமாக ஏதாவது செய்ய சொல்லுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.