Header Ads



தந்தையின் வழியில் சஜித் சென்றால், அவருக்கும் அதோ கதிதான் - எச்சரித்துள்ள மகிந்த

சஜித் பிரேமதாசவை தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்றும் அவ்வாறு சென்றால் அவருக்கு அதோ கதிதான் என எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

தங்கால்லை கால்டன் இல்லத்தில் இன்று -28- இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

தந்தையின் வழியிலேயே தானும் பயணிக்கவுள்ளதாக சஜித் பிரேமதாச கூறி வருகின்றார். அவ்வாறானால் அவருக்கு அதோ கதிதான்.

தயவு செய்து அவரது தந்தையின் வழியில் செல்ல வேண்டாம் என்று அந்த அரசியல் இளைஞனுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை ஏற்படுத்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியது. இந் நிலைமை இம்முறை தொடராது.

நாட்டின் உள்ளக இறையாண்மையில் தலையிடுவதற்கு எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. அதற்கு ஒருபேதும் அனுமதி வழங்கவும் முடியாது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான கூட்டணியை தோல்வியடைய செய்யவும் தற்போது அரசியல் சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச் சதிகளை அனைவரும் ஒன்றினைந்து தோற்கடித்தால் உத்தேச தேர்தல்களில் அமோக வெற்றிப் பெறலாம் என்றார்.

4 comments:

  1. Sajid’s father was killed by LTTE. Is Mahinda suggesting he would do what LTTE did for his father?

    ReplyDelete

  2. APPAN PREMADASAVIDAM,KIDAITHA
    AAYUZANGALAI VIDA,MIHAVUM KOODUZALANA

    THOHAI AAYUZANGAL PETRUKKOLLALAM
    ENRU. PULIHAL SHANDOSAPPADUM.

    ReplyDelete
  3. ILANGAYIL MEEZIAHA ULLA
    PUZYALHAL, KOODIYA SHEEKIRAM
    VELIYIL EDUTHIDUVAARU.
    PUZAYAL EDUPPAZIL,
    KETTIKKAARAN.

    ReplyDelete
  4. காலமெல்லாம் உங்க குடும்பம்தான் அதிகாரத்தில் உள்ள அனைத்து பதவிகளிலும் இருக்கவேண்டும்போல.மரணம் எல்லோருக்கும் உண்டு என்பதை மறக்கவேண்டாம்.

    ReplyDelete

Powered by Blogger.