Header Ads



அரச அலுவலகங்களில் அபாயா அணிய, தடுத்ததாக முறைப்பாடுகள் இருப்பின் நடவடிக்கை எடுப்போம்

தங்­க­ளது கலா­சார ஆடை­களை அணிந்து கட­மைக்குச் சென்ற சில அரச ஊழி­யர்கள் அவர்க­ளது அலு­வ­ல­கங்­களில் தொல்­லை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக எமக்கு அறிக்­கைகள் கிடைத்­தன.

அதற்­காக நாம் வருந்­து­கிறோம். இது தொடர்­பாக ஏதும் முறைப்­பா­டுகள் இருப்பின் அவற்­றுக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுப்போம் என பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார்.

ஆங்­கில ஊட­க­மொன்­றி­னது நேர்­கா­ண­லின்­போது அரச முஸ்லிம் பெண் ஊழி­யர்­க­ளது ஆடை தொடர்­பாக வின­வப்­பட்ட கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில், அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் அமைச்­ச­ர­வையின் தீர்­மா­னத்­துக்கு அமை­யவே நாம் திருத்­தங்­களைச் செய்தோம். அமைச்­ச­ர­வையில் இது தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டன. இறு­தியில் எங்­களால் திருத்­தங்­களைச் செய்­வ­தற்­கான பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது.

அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்பில் முதன்­முதல் 1989 ஆம் ஆண்டே சுற்று நிருபம் ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. அரச ஊழி­யர்கள் எவ்­வா­றான ஆடை அணிய வேண்­டு­மென அந்தச் சுற்று நிருபம் துல்­லி­ய­மாகத் தெரி­வித்­துள்­ளது. இந்­தச்­சுற்று நிரு­பத்­துக்குப் பின்பு மேலு­மொரு சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. அச்­சுற்று நிரு­பத்தில் பெண் அரச ஊழி­யர்கள் ஆடை­யினை தைத்துக் கொள்­வ­தற்­கான கொடுப்­ப­ன­வொன்­றினை வழங்­கு­வ­தற்கும் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சுற்று நிருபம் 2008 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்­டது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முகத்­தி­ரையைத் தடை­செய்து அண்­மையில் வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்­றினை வெளி­யிட்டார். இதற்கு அமை­வா­கவே நாம் சுற்று நிரு­பத்தை அண்­மையில் வெளி­யிட்டோம். அதில் அரச பெண் ஊழி­யர்­களின் ஆடை சாரி (சேலை) அல்­லது ஒசரி என்று குறிப்­பிட்டோம்.

பாரம்­ப­ரிய கலா­சார உடை இவ்­வா­றான ஆடை சட்ட ஒழுங்­கு­க­ளுக்கு முரண்­ப­டலாம். அத்­தோடு நாட்டின் கலா­சா­ரத்­து­டனும் முரண்­ப­டலாம். ஆனால் அரச ஊழி­யர்­களைப் பொறுத்­த­வ­ரையில் நாம் இதனை வேறு­ப­டுத்­தியே பார்க்க வேண்­டி­யுள்­ளது.

அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரத்­து­டனே சுற்று நிரு­பத்தில் நாம் திருத்­தங்­களைச் செய்­துள்ளோம்.

பாரா­ளு­மன்ற தெரிவுக்குழு அங்­கத்­து­வர்­க­ளுக்கு அரச அதி­கா­ரி­களை கேள்­விக்குட் படுத்­து­வ­தற்கு உரிமை இருக்­கி­றது. அத­ன­டிப்­ப­டை­யிலே அமைச்சின் செய­லாளர் ஜே.ஜே. ரட்­ண­சிரி அரச ஊழி­யர்­களின் ஆடை தொடர்­பாக வெளி­யி­டப்­பட்ட சுற்று நிருபம் தொடர்பில் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்டார்.

கடந்­த­கால அர­சாங்­கத்தில் அரச அதி­கா­ரி­க­ளுக்கு சுதந்­தி­ர­மாக கருத்து வெளியிடுவதற்கும், பேசுவதற்கும் இடமளிக்கப்படவில்லை. ஆனால் அரச அதிகாரிகள் அச்சமின்றிப் பேசுவதற்கான வழியை நாம் திறந்து விட்டிருக்கிறோம். இந்த உரிமையை நாம் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளோம். இதுவே நல்லாட்சி யாகும். நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

vidivelli

No comments

Powered by Blogger.