Header Ads



போதை வர்த்தகர்கள், குற்றவாளிகள் வெற்றிக்களிப்பில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர் - ஜனாதிபதி

போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தான் தனித்து விடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் 90 சதவீதமான மக்கள் தனது போராட்டத்துடன் இணைந்துள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இரத்தினபுரி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனையை வழங்குவது குறித்து, தான் எடுத்த முடிவுக்கு எதிராக, அரசாங்கத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் வீதிக்கு இறங்கும் போது, போதை வர்த்தகர்கள், குற்றவாளிகள் ஆகியோர் வெற்றிக்களிப்பில் ஈடுபடத் தொடங்கி விட்டனர் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அவர்கள் kg கணக்கில் அடித்தால்தான் வெற்றி களிப்பில் ஈடுபடலாம் , நீ அதை முகர்ந்து பார்த்தால் காணும்.

    ReplyDelete

Powered by Blogger.