Header Ads



இந்த வாய், இனி மைத்திரியை தோற்கடிக்க குரல் கொடுக்கும்

ஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் வேளையில் எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கபடுகின்றது.

 இதனால் எமது உயிர் தொடர்பாக நம்பிக்கை கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமசந்திர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிப்பெறச் செய்வதற்காக குரல்கொடுத்த அதே வாய் இனி அவரை தோற்கடிப்பதற்காக குரல் கொடுக்குமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிச்சனையை  ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

No comments

Powered by Blogger.