Header Ads



சிங்களே இனவாத ஊடகங்களே, ஏன் இதனை மறைத்தீர்கள்...?


பண்டாரகம அட்டுலுகம பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஓர் ஊடக சந்திப்பினை நேற்று05ம் திகதி அங்கு ஏற்பாடு செய்திருந்தனா் அம்மாா் மௌலவியும் இச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தாா். அத்துடன் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரும் கருத்து தெரிவித்தனா். இவ் ஊடக சந்திப்பில் கடந்த வாரம் ஞானசாரத் தேரர்டுடன் இணைந்து இப் பிரதேசத்தில் வாழும் ஓர் முஸ்லிம் பெண் அட்டுலுகம பண்டாரகம ஊரையும் முஸ்லிம் சமுகத்தினையும் இஸ்லாம் மதத்தினையும் அவதுாறாக ஊடகங்களில் சொல்லியிருந்தாா். 

அதற்கு பதில் வழங்குவதற்காகவே குறித்த பெண்னின் அருகாமையில் வாழும் சிங்கள பெண்கள் சிலா் ஒரு முஸ்லிம் பெண்னும் முன்வந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தனா் -(ஆனால் அங்கு வருகை தந்த கிரு, தெரன,சுவா்னவாகினி இதுவரை இந்தச் செய்தியை அவா்களில் ஊடகங்களில் ஒழிபரப்ப வில்லை ஆனால் அந்தப் பெண்னின் கருத்தினை பலமுறை ஒழிபரப்பியுள்ளனா்

இந்த முஸ்லிம் பெண் பேருவளை மருதானை கடலோரத்தில் வாழ்ந்து வந்தவா் ஏற்கனவே ஒரு முஸ்லிமை திருமணம் செய்து பின்னா் இங்கு குடிவந்தவுடன் ஒரு சிங்களவர திருமணம் முடித்தாா். அவா் சாரதி தொழில் பாா்ப்பவா் 2 பிள்ளளைகளும் உள்ளன, இப் பிரதேசத்தில் உள்ள சிங்கள பாடசாலையில் ஒன்றில் இவரது பிள்ளைகள் கல்வி கற்கின்றாா்கள். கடந்த சுனாமி அனா்த்த்தினால் வீடுகளை இழந்த  பேருவளை களுத்துறை பானந்துரையைச் சோந 23 குடும்பங்கங்களுக்கும் ஒரு என்.ஜி.ஓ ஊடாக அட்டுலுகம பிரதேசத்தில் ஒரு காணியில் 13 சிங்கள குடும்பங்கள் 9 முஸ்லிம் குடும்பங்களுக்கும் சுனாமி வத்தை என பெயரிட்டு அங்கு வீடுகளை நிர்மாணிதது அரசாங்கத்தினால் குடியமர்தப்பட்டோம். கடந்த 12 வருடங்களாக இப் பிரதேச முஸ்லிம், சிங்கள மக்களுடன் அந்நியோன்னியமாகவும் ஜக்கியமாகவும் வாழ்ந்து வருகின்றோம். இந்தப் பெண்னின் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் சரியில்லை. கடந்த மாா்ச் மாதம் 24ஆம் திகதி இந்தப் பெண்னின் வீட்டிற்குள் ஓர் ஆண் உள் இருப்பதாகவும் இவரது கணவா் அன்று தொழிலுக்குச் சென்றுவிட்டதாகவும் அக்கம் பக்க்த்தில் உள்ள நாங்கள் அவதானித்தோம். நாங்களாகவே இந்த வீட்டை சுற்றிவலைத்து பொலிஸ்ரின் அவசர அழைப்பு 119க்கு அழைப்பு விடுத்த்தோம். அந்த ஆணை அங்கு வந்த பொலிஸாா் சீலையால் மறைத்து கைது செய்து அழைத்துச் சென்றாா்கள். அவா் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தராகவே இருக்கக் கூடும். அதன் பிறகு தான் இந்தப் பென் ஞானசார தேரா் உடன் சென்று இந்த பிரதேச முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் உறுப்பிணா்கள் பலவந்தமாக இவரது கணவனை முஸ்லிம் மதத்திற்கு மாறச் செல்லியதாகவும் இப் பெண் பௌத்தமதத்திற்கு மாறுவதற்கு அடித்தாகவும் பொய் சொல்லுகின்றாா். இவா் ஒரு மதமும் இல்லை முஸ்லிம் பெயரை வைத்து முஸ்லிம் மதத்திற்கும் அச் சமுகத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் அவதுாறு சொல்லுகின்றாள். இப் பெண்னை ஒருபோதும் யாரும் பலவந்தப்படுத்தியதாகவும் அவரை முஸ்லிம்கள் அடிக்கவும் இல்லை இந்த 23 குடும்பங்களும் சாட்சியாக உள்ளோம். 

இந்தப் பிரதேசத்து முஸ்லிம்கள் எங்களுக்கு உதவிதான ஏதும் செய்வாா்கள் ஆனால் இவ்வாறான ஒரு தனிப்பட்ட சம்பவங்களில் அவா்கள் சம்பந்தப்பட இல்லை. இங்கு ஒரு நீதி தான் உள்ளது சரிஆ நீதி ஒன்று இங்கு இல்லை. அவ்வாறு நீதியை பிரயோகப்படுத்தியாக ஞானசாரா்தான் ஊடகங்களில் சொல்லுகின்றனாா். இப் பிரதேசத்தில் 3 பன்சலைகள் உள்ள அவா்களிடமும் விசாரிக்காது ஞானசாரா் தேரா் இந்தப் பெண்னை கொழும்புக்கு அழைத்து ஊடகங்களில் பொய்யான கருத்துக்களையும் இவரை நாங்கள் சுற்றிவலைத்த வீடியோவை திர்த்துக் காண்பித்து முஸ்லிம்கள் அடிக்க வந்தாகவும் தவறாகக் காட்டுகின்றாா். . இந்தப் பெண் இஸ்லம் அல்லது பௌத்த மதமே இல்லை. சுனாமியினால் இந்தப் பிரதேசத்தின் குடிபெயா்ந்து இங்கு வாழ் மக்களை கொச்சைப்படுத்தி இவ் ஊருக்கு அவதுாறு சொல்லி பொலிஸிலும் எங்களது பிரதேசத்தில் வாழும் சக முஸ்லிம் 5 அப்பாவிகளையும் கைது செய்துள்ளாா்.

முஸ்லிம் பெண் ஒருவரும் கருத்து தெரிவிக்கையில் எனது கணவா் பேருவளை இந்தப் பெண்னை நன்கு தெரிந்தவா் அருகில் வாழகின்றோம். எனது கணவா் அன்றாடம் மீன்பிடித்து குடும்பத்தினை பாதுகாப்பவா் எனது பாடசாலை செல்லும் மகன் ் இவரது வீட்டுக்கு கல் வீசியதாகச் சொல்லி கடந்த 7 நாட்கள் கைது செய்து சிறையில் உள்ளதாகவும் அப்பிரதேச முஸ்லிம் பெண் அழுகையுடன் குறிப்பிட்டாா்.

Ashraff A Samad

No comments

Powered by Blogger.