Header Ads



முடியுமானால் ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சு பதவியை கொடுத்து பார்க்கட்டும் - ரதன தேரர் சவால்

முடியுமானால் ரிஷாட் பதியுதீனுக்கு அமைச்சு பதவியை கொடுத்து பார்க்கட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் அரசாங்கத்திற்கு சவால் விட்டுள்ளார்.

இதனை மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களிலிருந்து அவர் விடுவிக்கப்படுவதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.

முடியுமானால் அவருக்கு அமைச்சு பதவியை கொடுத்து பார்க்கட்டும் என அரசாங்கத்திடம் சவால் விடுகின்றேன்.

அவ்வாறு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ச.தொ.ச வாகனத்தை சட்டவிரோதமாக பயங்கரவாத செயல்களுக்கு வழங்கினார் என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டின் பேரில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் திணைக்களத்தில் நான் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளேன்.

அவ்வாறான முறைப்பாடுகளை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து முடிக்க இயலாது. அதனால் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழு அவரை குற்றங்களில் இருந்து விடுவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டால் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரரேரணையை புதுப்பித்து நாடாளுமன்றில் சமர்ப்பிப்போம். அதே நேரம் அவருக்கெதிராக முழு நாட்டையும் உண்ணாவிரதத்துக்காக அணி திரட்டுவோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

7 comments:

  1. காவிநிர பிடவைவை கட்டியுள்ள இந்த கசுமாலியின் மௌட்டீகமும் அநியாயங்களும் இந்த மஞ்சள்பிடவையின் புனித்த்தால் ஏனைய சிந்திக்கும் மக்களை பலவந்தமாக மடையர்களாக வாழும்படி தூண்டுகின்றது.

    அடுத்தமுறை இவன் உண்ணாவிரதமிருந்தால் அப்படியே அவனை சாகவிடுவது அனைத்து இலங்கயர்களின் கடைமையாகும்

    தாம்பத்திய கஸ்டமான குடும்ப வாழ்கை மக்களின் துன்பங்கள ஒரு அணுவளவாவது அனுவிக்காத இவன்களின் சிந்தனையில் எவ்வாறு மக்களின் கஸ்டங்களும் பிரச்சினைகளும் விளங்கும்

    இவன் ஒரு பவுத்தகோயிலில் சல்லிமுட்டியை வைத்து அதில் வாழந்து இன்பம் பெருவான் அவ்வாறு தன்குடும்பத்திற்காக தன் பிள்ளைகளுக்காக கஸ்டப்படும் ஒரு பொதுவான பௌத்த சிந்தனையுள்ள மனிதனின் கஸ்டங்களை உணர்ந்து இவன் அனுபவிப்பானா? அக்கஸ்டங்களை என்னவென்று இவனால் புரிந்துகொள்ளமுடியுமா?

    ReplyDelete
  2. If whole country follow the fasting then,country will be become strong 💪 by economically.what a rare idea.Hon.Rathna thero better then “Adam Smith”

    ReplyDelete
  3. Gread....iwanukkellam nalla paadam puhatta yaaro oruwar waruwaaru....appo thisa illama thambi odatthaan poraaru..iwara periyaalaakkuna enayya pikkuhalin nilay ambothaan.....so iwarukku thahuntha paadam puahattanum...

    ReplyDelete
  4. என்னடா இந்த ஆள் பெரிய வம்பனா இருப்பான் போல் இருக்கு. றிஷாத் என்ன உங்ககிட்ட அமைச்சுப் பதவி கேட்டாங்களா? இல்ல அரசுதான் வாங்க ரிஷாட் சேர் இந்தாங்க அமைச்சுப் பதவி. வந்து பிடிங்கன்னு கேட்டிச்சா. ஓன்னுமில்லாததற்கு ஏன் இந்த ஆள் பொறளியைக் கௌப்புறார் இந்தாளுக்கு அவங்கட Missionary ல வேலை ஒன்னும் கொடுக்க இல்ல போல. நேரம் இருக்கும்னா வெண்காயக் கூடைக்கு காற்றையாவது அடிச்சு Time Pass பண்ணலாம்.

    ReplyDelete
  5. 90% இலங்கை மக்கள் ரதன தேர்ர்ருக்கு ஆதரவு.

    ReplyDelete
  6. சாதாரண இவன் ஒரு நாட்டையே சீரழிக்கிறான் என்ற உண்மை இந்த நாட்டுமக்களுக்கும் அரசுக்கும் புரியாமல் இருக்கிறதா,

    ReplyDelete
  7. இவன் கட்டிப்போட்டு விசாரணை நடத்தி தண்டனை வழங்கனும்

    ReplyDelete

Powered by Blogger.