வசீம் படுகொலை விவகாரம் : ஒக்டோபரிலிருந்து வழக்கை விசாரிக்க தீர்மானம்
முன்னாள் றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் தகவல்களை மறைத்தமை குறித்து குற்றச்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பதில் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவிற்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைகளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் முன்னெடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான பரிசீலனைக்கு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் விக்கும் களுவாராச்சி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டது.
இதன் போது வழக்கின் பிரதிவாதியான அநுர சேனாநாயக்க ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(செ.தேன்மொழி)
தேர்தல் வரும்போதுதான் வாசிம் தம்பி வருவார்
ReplyDeleteSo, there will be a Election soon
ReplyDelete