Header Ads



மலிங்க மீது, சேறுபூசுகின்றனர்- மகிந்த கவலை


லசித் மலிங்க எனக்கு நன்றி தெரிவித்தமைக்காக அவர் மீது சேறு பூசுகின்றனர்  என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசியல் ரீதியில் மற்றவர்கள் மீது சேற்றை வாரியிறைப்பது  அதிகமாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சேற்றை வாரியிறைப்பதன் மூலம் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது இன்றும் அதனை தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

பதினொரு வருடங்களிற்கு முன்னர் மலிங்கவின் காலில் காயம் ஏற்பட்டபோது நான் உதவினேன் என தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ச அது அவரிற்கு மிக முக்கியமானதாக விளங்கியது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் மலிங்க ஆற்றிய பிரியாவிடை உரைக்காக அவர் மீது சிலர் சேற்றைவாரி வீசுகின்றனர் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.