Header Ads



வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த, பூஜித்த சற்றுமுன் கைது

கட்டாய விடுமுறையில் இருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாரஹேன்பிட்ட பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பொலிஸ் மா அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாார்.

மேலும், சற்று முன்னர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவனுகள் 2 பேரேயும் நாலாம் மாடிக்கி ஏத்தி , பின்னாலே pipe உட்டா எல்லா உண்மையும் வெளியே வரும்

    ReplyDelete

Powered by Blogger.