Header Ads



முஸ்லிம் அமைச்­சர்கள், பத­வி­து­றந்து ஒரு மாதம்


முஸ்லிம் அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் மற்றும் பிர­தி­ய­மைச்­ச­ரொ­ரு­வரும் பதவி துறந்து இன்­றுடன் ஒரு­மாதம் நிறை­வ­டை­கின்­றது. முஸ்லிம் சமூகம் எதிர்­கொள்ளும் சம­கால பிரச்­சி­னை­யுடன் தொடர்­பு­டைய 10 அம்சக் கோரிக்கை முன்­வைத்து தாம் பதவி துறப்­ப­தாகக் கூறி­யி­ருந்­த­நி­லையில், பிரச்­சி­னை­க­ளுக்கு இது­வரை முழு­மை­யான தீர்­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், ரிஷாத் பதி­யுதீன் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள பத­வி­யி­லி­ருந்தும் எச்.எம்.எம்.ஹரீஸ், அலி­சாஹிர் மௌலானா, அமீர் அலி மற்றும் பைஸல் காஸிம் ஆகியோர் இரா­ஜாங்க அமைச்சர் பத­வி­யி­லி­ருந்தும் அப்­துல்லாஹ் மஹ்ரூப் பிர­தி­ய­மைச்சர் பத­வி­ய­மைச்சர் பத­வி­யி­லி­ருந்தும் வில­கி­யி­ருந்­தனர். எனினும் கபீர் ஹாசிம் மற்றும் எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் பின்னர் அமைச்சுப் பொறுப்­புக்­களை ஏற்­றுக்­கொண்­டனர்.

பதவி வில­க­லின்­போது 10 அம்சக் கோரிக்­கையை அர­சாங்­கத்­திடம் முன்­வைத்து பத­வி­து­றந்­த­தாக குறிப்­பி­டப்­பட்­டது.

ஏப்ரல் 21 பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து அவ­ச­ர­கால சட்­டத்தின் கீழ் சிறு குற்­றங்­க­ளுக்­காக முஸ்­லிம்கள் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந்த அப்­பாவி முஸ்­லிம்கள் விடு­விக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரப்­பட்­டி­ருந்­தது. அந்­த­வ­கையில் கடந்த இரு வாரங்­க­ளாக பலர் விடு­வக்­கப்­பட்­டனர். அத்­துடன் தொடர்ந்தும் விடு­விப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெ­று­கின்­றன. இதே­வேளை, அரச நிறு­வ­னங்­களில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்பில் சர்ச்­சைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. பொது நிர்­வாக அமைச்சின் செய­லாளர் வெளி­யிட்ட சுற்­று­நி­ருபம் மேலும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் முஸ்லிம் எம்.பி.களின் அழுத்தம் கார­ண­மாக குறித்த சுற்­று­நி­ருபம் திருத்­தப்­பட்டு முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் அபாயா அணிய முடி­யு­மான வகையில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டன.

இது­த­விர முஸ்லிம் பிர­தே­சங்­களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­களில் தொடர்ந்தும் மந்த நிலைமை காணப்­ப­டு­கின்­றது. அத்­துடன், குறித்த தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்ட பலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசரகால சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. WAS IT NOT THE ADVICE GIVEN BY THE ACJU/RIZVI MUFTHI TO THE MUSLIM MINISTERS, DEPUTY MINISTERS AND STATE MINISTERS TO RESIGN FROM THEIR MINISTRIES PLUNGED OUR COMMUNITY INTO GREAT POLITICAL AND COMMUNITY DISASTER. The Muslims in Sri Lanka need a "CHANGE" to the Leadership of the ACJU and our Political institutions. THE ACJU NEEDS A NEW DILIGENT, HONEST AND TRUELY ISLAMIC RIGLIGOUSLY WAY OF LIVING LEADER Insha Allah. So "The Muslim Voice" urge you to work towards that, Insha Allah.
    "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.