Header Ads



வவுனியாவில் கிணற்றிலிந்து, இன்று ஆயுதங்கள் மீட்பு (படங்கள்)


வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணறொன்றிலிருந்து இன்று காலை (22.07) இராணுவத்தினரால் ஆயுதங்கள் சில மீட்டுள்ளன.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து ஆயுதங்களை மீட்கும் செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 81எம்.எம்.குண்டுகள் 11, ரி.56 துப்பாக்கி , மிதி வெடி உட்பட சில ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயப்பகுதி (வருவாய்த்துறை) செயற்பட்டு வந்த பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இத் தேடுதலானது ஓமந்தையின் 563 ஆவது பிரிகேட்டின் கேணல் பண்டுக்க பெரேரா மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி நிசந்த ஆகியோரின்  தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



2 comments:

  1. நல்ல வேளை Muslim கள் இல்லாத ஏரியாவாக இருந்தது.இல்லாவிட்டால் இனவாதிகலுக்கு நல்ல அவல் கிட்டியிருக்கும் சில மாதங்களுக்கு மெல்லுவதர்கு.

    ReplyDelete
  2. இவளவு நாளும் 1 சீன வெடில் கூட பிடிக்கில்லே . இப்பெ என்ன பாஸ் டெய்லி பிடிக்கையால்

    ReplyDelete

Powered by Blogger.