Header Ads



மிக விரைவில் பாரதூரமான, விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் - சங்கரத்ன தேரர்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு நேற்று பெயருக்கு வந்துபோன ஒரு கணக்காளர் இன்று வரவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகமா? அப்பாவி தமிழ் மக்களை அரசாங்கமும், த.தே.கூட்டமைப்பும் சேர்ந்து ஏமாற்றுகிறதா? என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் த.தே.கூட்டமைப்பினருடனான அலரிமாளிகை சந்திப்பின் பிரகாரம் நேற்று கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் நியமிக்கபட்டு வருகை தந்து பகல் 1.30 மணியளவில் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சங்கரத்னதேரர் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று வந்த கணக்காளர் அம்பாறை அரச அதிபரின் கட்டளைக்கிணங்க தான் இங்கு வருகை தந்துள்ளதாக் கூறியுள்ளார். அவரிடம் முறையான நியமனக்கடிதமோ இடமாற்ற கட்டளைக்கடிதமோ இருக்கவில்லை.

இது எதற்காக நடைபெற்றது? இது தமிழ் மக்களை சீண்டிப்பார்க்கும் நாடகமா? அல்லது பேய்க்காட்டும் நடவடிக்கையா?

இன்னுமின்னும் ஏமாற்றும் செயற்பாட்டில் சென்றுகொண்டிருந்தால் மிக விரைவில் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த நாடகம் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. கல்முனை தமிழ் மக்கள் சகல தமிழ் எம்.பிக்களிடத்திலும் என்ன கூறினார்கள் என்பதை சகலரும் அறிவீர்கள்.

இன்னமும் தமழர்களிடையே அரசியல் செய்யவேண்டும் என்றால் நாளைக்கிடையில் நிரந்துர கணக்காளரொருவர் நியமிக்கப்படுவதோடு, தனியான கணக்கும் திறக்கப்படவேண்டும். இதுவே எமது நிலைப்பாடு.இதனை மீறி தேசியம் சர்வதேசம் என்று கூறி பூச்சுற்ற புறப்பட்டால் நாளை இங்கு வரவேண்டிய தேவையிருக்காது.

கோடீஸ்வரன் எம்பியும் கூறியுள்ளார். நான் வருவதென்றால் கணக்காளரோடு தான் வருவதாக. அப்படி வந்தால் வரலாம். இல்லாவிட்டால் தமிழ் மக்கள் நல்ல பதிலை எதிர்வரும் காலத்தில் சொல்வார்கள். எனவும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. சுப்பர்
    Well done பிக்கு சார்
    கல்முனை முஸ்லிம் இனவாதிகளுக்கு சரியான ஆள் இவர் தான்

    ReplyDelete
  2. ஆட்சி மாறியவுடன் அவரும் மாறுவார். அந்தோணி! போய் அவர் காலை கழுவி, ஆசிர்வாதம் வாங்கு. தமிழ்-சிங்கள உறவு மேம்பட வேண்டுமல்லவா? லொள்

    ReplyDelete
  3. கல்முனை பிரச்சினை தமிழ் முஸ்லிம் உற்வில் வளர்கிற புற்றுநோய்.

    ReplyDelete
  4. ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதிச்சாம். இந்த தேர ஏதோ plan பன்றான் என்பது நன்றாக தெரியுது. இரு சமுதாயத்தவரும் உஷாரா இருங்கோ.

    ReplyDelete

Powered by Blogger.