அஸ்கிரிய பீடத்துக்குள் நுழைய, தொப்பியை கழற்றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...?
முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினத்தவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் இருதரப்பு மதத்தலைவர்களும் கலந்துரையாடித் தீர்த்துக்கொள்வோம். இது மதத்தலைவர்களின் பொறுப்பாகும். இதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தும் நடத்துவோம். சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வோம் என அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன மகாநாயக்கதேரர் தன்னைச் சந்தித்த உலமாக்களிடம் தெரிவித்தார்.
உலமா சபையின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை காலை கண்டி அஸ்கிரிய பீடாதிபதி வரகாகொட ஞானரதன மகாநாயக்க தேரரை கண்டியில் சந்தித்து கலந்துரையாடினார்கள். நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் சந்தேகிக்கப்படுவதாகவும், பல்வேறு சவால்களுக்குட் படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட குழுவினரே இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாகவும் இதற்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பானதல்ல எனவும் உலமாக்கள் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரிடம் எடுத்து விளக்கினார்கள். அப்போதே அஸ்கிரிய மகாநாயக்க தேரர் இவ்வாறு கூறினார்.
இந்தச் சந்திப்பினை நாவின்ன ரஜமகாவிகாரை விகாராதிபதி பராமுர நன்தானந்த தேரர் ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு உலமாக்கள் அஸ்கிரிய பீடாதிபதியிடம் கருத்து தெரிவிக்கையில்;
ஒருசில குறிப்பிட்ட தேரர்கள் உலமா சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது எனத் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அப்படியானவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு நாம் விரும்பவில்லை. அஸ்கிரிய, மல்வத்து மற்றும் ராமன்ய நிகாய தலைவர்களுடனேயே பேச்சுவார்த்தைகள் நடத்தி தற்போது நிலவும் பிரச்சினை களுக்கும் சந்தேகங்களுக்கும் தீர்வுகாண விரும்புகிறோம். இன்று முஸ்லிம்களை தவறாக விமர்சிக்கிறார்கள். தீவிரவாதிகளாக சந்தேகிக்கிறார்கள். இவை நிறுத்தப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டார்கள்.
குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதி அஸ்கிரிய பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன் குர்ஆன் மற்றும் சில ஆயத்துகளுக்கான தெளிவுகளும் வழங்கப்பட்டன. தேசிய ஒற்றுமை, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பாக உலமா சபை வெளியிட்ட சிங்கள மொழியிலான நூல்களும் கையளிக்கப்பட்டன.
அஸ்கிரிய பீடத்துக்குள் நுழைவதற்கு உலமாக்கள் தொப்பியைக் கழற்றிய பின்பு அனுமதிக்கப்பட்டனர். அது சம்பிரதாயமென்று தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம், உப தலைவர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன், கண்டி மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா சபையின் உப தலைவர் பஸ்ருல் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்களான அஷ்ஷெய்க் பாசில் பாரூக், அஷ்ஷெய்க் பரீத், அஷ்ஷெய்க் கபீர், அஷ்ஷெய்க் லரீப், அஷ்ஷெய்க் ஹைதர் அலி, அஷ்ஷெய்க் ஹாசிம் ஷுரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
காத்தான்குடியில் வீதி மரங்கள் உள்ளிட்ட அரபிய அடையாளங்களை அகற்றுமாறு கண்டி பௌத்தபீடம் உத்தரவிடவேண்டும்
ReplyDeleteகிழக்கில் அரபு எழுத்துக்கள், மரங்கள், பூனானை கம்பஸ், அரபு கல்லூரிகள், மதராஸ் ஆகினபற்றிய முக்கிய ஒழுங்குவிதிகளை மகாசங்கம் அறிவிக்க வேண்டும்
ReplyDeleteShame on you gentlemens. Why do we give up our own identifications just because of these kind of RACISTS.
ReplyDeleteமுஸ்லீம் சமூகத்தையே கேவலப்படுத்தி கேளிக்கையாகிய இந்த கேடுகெட்ட நாய்களுக்கு ஒரு அஷ் ஷேக் பட்டம் தேவையா?
ReplyDeleteநீங்கள் மத மாறினால் இதைவிட நல்லா இருக்குமே அதாவது பிரச்சினை லேசாக முடிந்து விடும்
ReplyDeleteஇறைவனின் சோதனை வெகு தூரத்தில் இல்ல.
ReplyDeleteVery funny !
ReplyDeleteShame on All of them...
ReplyDeleteஇவனுகளுக்கு இஸ்லாத்தை சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையா?
ReplyDeleteIts not funny at all. We want justice, peace and harmony among our society and the country as well. We must be ready for it under any cost. If their tradition is to remove cap before entering their shrine; its OK. How many Ulamas we can see at road without caps. Do not take seriously whichever not important at the moment.
ReplyDeleteMr Ash sheikh shihabdeen
ReplyDeleteஇப்ப சரியா ?
இப்ப சந்தோஷமா ?
அவர்களுக்கு பொருத்தமில்லை என்று சொல்ல நீங்கள் தகுதியானவரா?
யார் நாய் என்று காலம் பதில் சொல்லும்...
தயவு செய்து உங்களது பரம்பரையை அல்லாஹ்வின் கோபத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள்...
wanthuduwanuwal
ReplyDeleteலாயிலாஹ இல்லல்லாஹ் இவ்வாறான செய்திகள் வரும்போது தீர விசாரித்து நல்லெண்ணங்களுடன் நாம் பின்னூட்டங்களை செய்ய வேண்டும் என்பதே எனது கருத்தாகும். இந்த அளவு கீழ்த்தரமாக இந்த சமூகத்தின் உயர் சபையில் இருப்பவர்களை விமர்சித்து விட்டு நாம் என்ன செய்யப்போகிறோம்...? குழப்பமான காலங்களில் மிகவும் நிதானமாக மற்றவர்களின் மனங்களை உடைத்துக்கொள்ளாத விதத்தில் நடந்துகொள்ள வேண்டிய நாம் இந்தக் காலத்திலும் இவ்வாரான அடிப்படையில் கருத்துச்சொன்னால் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக சிந்கும் முதல் வர்க்கத்தினராக ஆகிவிடுவோம் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.
ReplyDeleteதொப்பி முஸ்லிம்களின் சுன்நா கிடையாதே.... அல்ஹம்துலில்லாஹ் சுன்னதான தாடியுடன் போயிருக்கிறார்கள் தானே
ReplyDeleteMr unknown: உங்கள் சொந்தத்தபெயரில் எழுத முதுகெலும்பு இல்லாத நீங்கள் ஐந்து சதம் கூட பெறுமதி இல்லாத இந்த கேளிக்கையான பட்டங்களை தயவுசெய்து எனக்கு சூட்ட வேண்டாம்.
ReplyDeleteதனியாக எங்கேயும் எதையும் கழட்டிவிட்டு போகட்டும். சமுகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் போது சீரழிக்கவேண்டாம்.
Mr. Shihabdeen. can you explain what have you done to solve the current situation. All the people talk non sense here, What have you done to the society to condemn them. fear Allah if you have proper faith. Jaffna Muslim have to take response for this kind of misleading heading. please be responsible when you publish any news.
ReplyDeleteMr. Asad: When communal violence were imposed from Mawanalla to Minuwangoda on our Muslim Community, what your ACJU has done to stop those barbarism or at least, have you taken any precautions? Having degraded the dignity of our community for years and years, now, are you asking me what I have done? But I know very well you can do one thing better, that’s how to sell our community for your survival. Please let us know what happened to the 10 pearch of Colombo land donated by MR. You have to fear Allah. What happened to Saddam and Gadhafi might happen to you all.
ReplyDeleteIf I have the authority to represent our Muslim Community, I’m sure I can serve or do things better than ACJU. Because I believe “PREVENTION IS BETTER THAN CURE “
அபு நுஹா சொல்லுவதும் சரிதான் தொப்பி ஒன்ரும் விஷயம் இல்லை
ReplyDelete