தமிழர்களையும், முஸ்லிம்களையும் அவசரமாக சீண்டி விடுவது நோக்கமாக உள்ளது
கல்முனை பிரதேச செயலக விவகாரத்திற்கு உடன்பட்டிருந்தால் ஓட்டமாவடி, கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய பிரச்சினைக்காக இன்னுமொரு காவியுடை தரித்தவர் வந்திருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஏறாவூர், மீராகேணி பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ள யுவதிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
ஒவ்வொரு வகையான தந்திரோபாயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது கல்முனை பிரதேச செயலகம்.
நான் அதற்கு உடன்பட்டிருந்தால், ஓட்டமாவடி - கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய பிரச்சினைக்காக இன்னுமொரு காவியுடை தரித்தவர் அங்கிருந்திருப்பார்.
ஆக தமிழர்களையும், முஸ்லிம்களையும் அவசரமாக சீண்டி விடுவது நோக்கமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment