Header Ads



பரபரப்பான நிலையில் கூடவுள்ள மு.கா. உயர்பீடம் - ஹரீஸ் என்ன செய்யப்போகிறார்..?

- AAM. Anzir - 

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம், நாளை ஞாயிற்றுக்கிழமை, 21 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

அமைச்சுப் பதவிகளை மீளப்பெறுதல் குறித்து, ஆராயும் நோக்குடன் இக்கூட்டம் கூட்டப்படவுள்ளது.

கூட்டத்தில் எட்டப்படவுள்ள  முடிவு அடிப்படையிலயே மு.கா. அரசியல்வாதிகள், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பெறுதல்  தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் நாளைய மு.கா. உயர்பீடக் கூட்டத்திற்கு ஹரீஸ் செல்வாரா, அப்படிச் சென்றால் உயர்பீட கூட்ட தீர்மானத்திற்கு கட்டுப்படுவாரா, மீண்டும் அமைச்சுப் பதவியை ஏற்க இணங்குவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

No comments

Powered by Blogger.