Header Ads



பூர்வீகமாக பார்த்தால் தமிழரும், சிங்களவருமே முதலாம் தரப்பு - அவர்களுக்கும் கல்முனை நகர் சொந்தம்


கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுற்று 15 தினங்களாகின்ற நிலையில் அரசாங்கம் விரைவில் நியாயமான தீர்வை தர வேண்டும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த நான்கரை வருடங்களாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கிறோம் என்று கூறி காலத்தை கடத்தி விட்டு இன்று இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள் தீர்வு தருகிறோம் என்கிறார்கள்.

அப்போது ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். எனவே தற்போது ஒன்றும் செய்யமுடியாது. தேர்தல் முடியப்பார்ப்போம் என்பார்கள்.

நாங்கள் யாருடைய கதையை கேட்டோ யாருடைய பின்புலத்திலோ எமது உண்ணாவிரதத்தை தொடங்கவில்லை. நான் த.தே.கூட்டமைப்பை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் மாத்திரம் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனிடம் சொன்னேன்.

அவர் அப்போது வெளிநாட்டிலிருந்தார். மற்றது கட்சித்தலைவர் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்டேன். முடியவில்லை. ஆக நாம் எந்த அரசியல்வாதிகளையோ, மதவாதிகளையோ உண்ணாவிரத திடலுக்கு அழைக்கவில்லை.

மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள். கல்முனை தமிழ் மக்கள் மன்றம் கூடவே இருந்தது. நாமும் எமது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக மக்களுக்காக வைராக்கியத்துடன் இருந்தோம்.

வடக்கு தொடக்கம் நாடெங்கிலுமிருந்து தமிழ் பற்றுள்ள அரசியலாளர்களும் ஏனையோரும் வந்தார்கள். அவர்களது கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள். அது அவரவர் சுதந்திரம்.

அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை வருகைதந்து எம்மை உற்சாகப்படுத்திய அனைத்து பிரமுகர்களுக்கும் எமது தமிழ் நன்றிகள். சிலருக்கு அசௌகரியம் ஏற்பட்டதற்காக கவலையடைகின்றோம். அதற்கும் எமக்கும் துளி கூட தொடர்பில்லை

ஞானசார தேரர் வந்தது பற்றி விமர்சனம் கிளம்பியது. உண்மையில் எமது அணியில் ஒரு பௌத்ததேரரும் உண்ணாவிரதமிருந்தார். அவர் தற்சமயம் கல்முனையில் வாழ்பவர்.

அவர்மட்டுமல்ல மேலும் பல சிங்களக்குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த அடிப்படையில் கல்முனையின் ஓரங்கம் என்ற அடிப்படையில் அவர் சார்ந்த மதத்தலைவர்கள் தினமும் வருகை தந்தனர்.

அவர்களுக்கும் கல்முனை நகர் சொந்தம். அது அவர்களது உரிமை. அவர்கள் 3ஆம் தரப்பல்ல. பூர்வீகமாக பார்த்தால் தமிழரும் சிங்களவருமே முதலாந்தரப்பு என குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. Appo neenga vadakaum kilakaum priti vidungo

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதுதான் சரி, உங்களுக்கு முஸ்லிம்கள் தான் எதிரி, நீங்கள் தமிழ் நாட்டிக்குப்போங்கள், முஸ்லிம்கள் அரபு நாட்டிட்க்குப்போகட்டும், நீங்களெல்லாம் உரிமைக்காகப் போராடிய தமிழர்களில்லை, நீங்கள் காட்டிக்கொடுக்கும் கருணாவின் பரம்பரையில் வந்தவர்கள், உரிமைக்காகப் போராடிய பிரபாகரனையே காட்டிக்கொடுத்தவர்கள் நீங்கள், முஸ்லிம்கள் பிரபாகரனை ஒரு சுதந்திரப்போராட்டவாதியாக மதித்தவர்கள், முஸ்லிம்கள் யார் சுதந்திரத்திட்காக போராடினாலும் மதிப்பவர்கள், முஸ்லிம்களுடன் பிரபாகரன் நல்லாயிருக்கவிடாது கெடுத்தவர்கள் நீங்கள், பிரபாகரன் இன்றிருந்திருந்தால் இந்தநிலை முஸ்லிம்களுக்கும் வந்திருக்காது, என்கென்லாம் புளிகளின் கிழக்கு கருணாகுழு இயங்கியதோ அங்கெல்லாம் ஆயுதமேந்தி முஸ்லிம்களின் இரத்ததினைக்குடித்தீர்கள், கருணா வடக்கிலிருந்தபோது அங்கிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினீர்கள், இக்கருணா கிழக்கிட்கு வந்தபோது காத்தான்குடியில் தொழுத முஸ்லிம்களின் இரத்தத்தினைகுடித்தீர்கள், இப்போது சத்தியாக்கிரகம் என்று வேறு உருவத்தில் வருகிறீர்கள், உம்மைப்போன்ற கருணாபோன்ற தமிழர்களுக்குத்தேவைப்பட்ட்டதெல்லாம் வடக்கு கிழக்கு இணையக்கூடாது அதேநேரம் அது முஸ்லிம்களால் பிரியவேண்டும், கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களோடு சேர்ந்துவாழும் சமூகம், அவ்வாறுவேண்டாமென்றால், எல்லாஇடம்களிலும் முஸ்லிம்களுக்கு தனிப்பிரதேச சபைகளை தமிழ் சபைகளிலிருந்து பிரித்துக்கேட்டால் என்னநடக்கும், உமது ஊரில் கௌரவமான நல்லதமிழர்கள் நிறையப்பேர் உள்ளனர், அவர்களிடமாவதுகேட்டுத்தெரிந்துகொள் ஐயா, தந்தைசெல்வா போன்றோர்கள் தமிழர்களில் மீண்டும் பிறப்பார்களா, அல்லது கருணாக்கள்தான் இனிப்பிறப்பார்களா, முஸ்லீம் தமிழ் உறவிட்கு இனி விடிவேயில்லையா

    ReplyDelete
  3. அடே முட்டாள் அப்ப ஏண்டா தனி நாடு கேட்டு முப்பது வருடங்களுக்கு அதிகமாக நாட்டையும் குறிப்பாக அப்பாவி தமிழரின் சந்தோசமான வாழ்க்கையும் நாசமாக்கினிர்கல்.கோழைகலா இனி ஆயுதம் ஏந்தி போராட எந்த வழியோ,வசதி வாய்ப்போ இல்லை.அதனால் பிக்குமாரின் காலை கழுவி,அவர்களின் அடிமைகலாக வாழ முடிவு எடுத்து விட்டீர்கள்.கல்முனை அல்ல முழு நாடுமே Sri Lanka வில் வாழும் அனைவருக்கும் சொந்தம்.ஆனால் நீங்கள்தான் வடக்கு,கிழக்கு இணைய வேண்டும்,சுயாட்சி வேண்டும்,தனி நாடு வேண்டும்,சிங்களவர்கல் வடக்கில் குடியேறல் கூடாது என தினமும் கழுதை போல் கத்துபவர்கல்.ஆனல் இப்ப எல்லாமே புக்ஷ்வானமகி விட Muslim களின் மயிரை என்னிப் பார்க்க வேண்டும் என நினைக்கிரீர்.தலை மயிரை எண்ண வேண்டும் என நீங்கள் நினத்தால் அது முடியாத காரியம்.நீங்கள் over acting பண்ணினால் கிழக்கில் சிங்களவர்கள் குடியேர நாங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் வழங்கி உங்களை கிழக்கில் மூனாம் இனமாக மாற்ற வேண்டி வரும்.ஏனெனில் சிங்களவர்கள் கிழக்கில் குடியேறி வாழ்வது எங்களுக்கு. No matter ஆனால் அது உங்களுக்கு தாங்கி கொள்ள முடியாத விடயம் என்பது எமக்கு தெரியும்.எனவே கொக்கரிக்கும் உங்களுக்கு சொல்லும் ஒரே விடயம் சிங்களவர்கலையும்,சிங்கள மொழியையும் கிழக்கில் பரப்ப எங்களுக்கு நீங்கள் வாய்ப்பை வழங்க வேண்டாம்.உங்களுடன் வாழ்வதை விட சிங்களவர்கலுடன் வாழ்வது எமக்கு மிக மிக மகிழ்ச்சியானது.இவ்வாறு நாங்கள் அவர்களுடன் ஒத்துழைத்தால் இப்போது உங்கள் பக்கம் இருக்கும் கொஞ்ஞ சிங்களவனும் எமது பக்கம் மீண்டும் சேருவார்கல்.எனவே சிங்கள மொழியும்,சிங்கள மக்களும் கிழக்கில் வருவதும்,நிரந்தரமாக வாழ்வதும் உங்களுக்கு ஏற்று கொள்ளமுடியாத விடயம்.ஆனால் எங்களால் ஏற்க முடியும்.so வீணாக கொக்கரித்து இலவசமாக வம்பை வாங்கி கட்டிக் கொள்ளாமல் கடந்த யுத்த காலத்தில் கிழக்கில் எப்படி பெட்டை கோழி போல் இருந்தீரோ அப்படி இரியும் அண்ணா

    ReplyDelete
  4. கல்முனை நகரம் மாத்திரமல்ல; மருதமுனை வேண்டுமா, காத்தான்குடி வேண்டுமா, மூதூர் வேண்டுமா சாய்ந்தமருது மற்றும் கண்டி வேண்டுமா எல்லாப் பிரதேசங்களும் இலங்கை வாழ் மக்களுக்குச் சொந்தமான பூமிதான். இதனை யாருக்கும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. கல்முனை நகர் பிரிப்பு என்பது சிறியதோர் Equation னுள் வரவேண்டிய ஒரு அம்சம். தமிழ் பகுதிகள் வேறாகவும் முஸ்லிம் பகுதிகள் வேறாகவும் சிங்களப் பகுதிகள் வேறாகவும் நிலத் தொடர்பற்ற முறையிலாயினும் பிரித்துக் கொடுத்து விட்டால் பிரச்சினை முடிகின்றது. எந்தப் பகுதியும் பிறர் பகுதியினுள் போக வேண்டிய அவசியம் இல்லை. இது நமது இரு தரப்பினரும் மிக அவதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தருணமாகும். ஞானசாரர் அதுரலிய போன்றோர் அழையா விருந்தாளிகளாகவே உண்ணாவிரத களத்தினுள் நுழைந்தவரகளாவர். தமிழர்கள் ஒன்னும் தெரியாத பாப்பா என்ற நினைப்பில் அவர்களைச் சூடாக்கி விட்டுச் சென்றுள்ளனர். அங்கு வீற்றிருந்த தலைவர்கள் என்று சொல்லப்படக்கூடிய தமிழ் சகோதரர்களும் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு விட்டனர். போர்க் காலத்திலும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஏற்பட்டுள்ள Critical condition ஏதாவது ஒரு தீர்வினை அரசுத்தலைவர்களிடம் கூறி செய்து தாருங்கள் எனக் கேட்டிருக்கலாம் அல்லவா? தமிழர்களுக்கு எத்தனையோ விடயங்களில் தீர்வுகள் கிடைக்க வேண்டியிருக்கின்றன. ஏதாவது ஒன்றையாவது சாட்டுக்காவது கேட்டு காலக்கெடு விதித்து வற்புறுத்தினீர்களா? எத்தனையோ சகோதரர்கள் சிறையில் வாடுவதை கொஞ்ஞம் தள்ளி வையுங்கள். அவர்களது குடும்பங்கள் பட்டுக் கொண்டிருக்கும் நெருக்குவாரங்களும் அலைச்சல்களும் எங்களுக்குத் தெரியாதனவல்ல. இதற்கெல்லாம் என்ன முடிவு. குளிருக்கு நெருப்புக் காயும் இடமாக வந்தவர்கள் கல்முனை விவகாரத்தை மாற்றிச் சென்றதுதான் கொடுமையிலும் கொடுமை.

    ReplyDelete
  5. Good
    நாட்டை மீட்க, அவசரமாக, சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து போராடவேண்டிய அவசியத்தை முஸ்லிம்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதற்கு பிறகு தான், எமது தமிழ் உரிமை போராட்டத்தை தொடரவேண்டிய நிலமை.

    ReplyDelete
  6. தம்பிகலா அதிகம் துள்ள வேனாம்,சுக்கான் எங்கள் கையில் “விமல் வீரவன்ச” சொன்னதை இரு தினங்களுக்கு முன் படித்திருப்பீர்கல்.muslim களின் ஆதரவு அவர்களுக்கு தேவை.எனவே நல்லாட்சியை நாம் கொண்டுவந்தோம் அதனால்தான் கடந்த 4 வருடங்களாக சுதந்திர காற்றை சுவாசிக்க முடிந்தது.ஆனால் இப்போது நீங்கள் போடும் ஆட்டம்,பாட்டத்தை பார்க்கும் போது மீண்டும் இரு நல்லாச்சி பொம்மைகளை விட்டு,விட்டு மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டு வந்தோமானால் தமிழரின் நிலை என்னவாகும் என்பதை கொஞ்ஞம் யோசித்து பாருங்கள்,துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓட வேண்டி வரும்.

    ReplyDelete
  7. அடேய் உமது தமிழ் உரிமை போராட்டம் இப்போது குப்பை கூடைக்குள்,ajan உமக்கு முடியுமா கிழக்கில் சிங்களவர் குடியேறி வாழ்வதுக்கும்,உங்கள் மொழியை,பாடசாலை கல்வியை சிங்களத்துக்கு மாற்ரி விட? முடியாது,ஆனால் எங்களுக்கு முடியும்.so,சிங்களவரின் ஆதரவு? அஜன் நீ எவ்வளவு பெரிய முட்டாள்! எங்கள் வாக்கு அவர்களுக்கு தேவை என்பதாலும் Muslim கள் அவர்களுடன் மீண்டும் இனைய வேண்டும் என்பதற்காக பிக்குமாரை வைத்து நடத்தும் கல்முனை நாடகத்தை இன்னும் புரியாமல் தமிழ் இனம் ஏமாந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது சிரிப்பாக இருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.