Header Ads



தன்னுடன் சிறையிலிருந்த கைதிக்கு, வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்த நாமல்


தன்னுடன் சிறையிலிருந்த அரசியல் கைதியொருவருக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ. 

தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று (30) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. அரசியல் கைதியான சபரிமுத்து லோகநாதனின் குடும்ப நிலையை சிறைச்சாலைக்குள் வைத்து அறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து இன்று (30) கையளித்தார்.

குறித்த அரசியல் கைதி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்ததோடு, கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு சென்று சந்தையின் நிலைமைகளையும் பார்வையிட்டார். மேலும் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு  வருகின்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டு இருப்பதனையும் அவர்நேரில் சென்று பார்வையிட்டார்.

முருகையா தமிழ்செல்வன் -

No comments

Powered by Blogger.