Header Ads



பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில், ஆவா குழு உறுப்பினர் பலி

பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் இன்றிரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ஆவா குழு உறுப்பினர்கள் இணைந்து பொலிஸாரை தாக்க முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலையடுத்து 05 ஆவா குழு உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளனர். 

எவ்வாறாயினும் அவர்களின் 03 வாள்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

2 comments:

  1. Weldone... அடக்க முடியாத பயங்கரவாதிகளை பிராபாகரனை போல் சுட்டு தள்ளுவதே தீர்வு.

    ReplyDelete

Powered by Blogger.