Header Ads



மக்கள் எதிர்பார்க்கும் வெற்றி பெறக்கூடிய, வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படுவார்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் செயற்குழு என்பன கூடி மக்கள் எதிர்பார்க்கும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி வேடபாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச நிறுத்தப்பட வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளதை தொடர்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச குறித்து அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளமை அவரிடமே கேட்க வேண்டும். அது நான் கூறிய கருத்து அல்ல.

பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் நாங்கள் தகுதியான வேட்பாளரை பொருத்தமான நேரத்தில் நிறுத்துவோம். எவரும் தனித்து வேட்பாளரை நிறுத்த முடியாது.

கட்சி என்ற வகையில் அனைவரும் இணைந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம் எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.