Header Ads



முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, வர்த்தக பூமியை விட்டுக்கொடுக்க முடியாது

கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது, கல்முனை முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கேள்விக் குறியாக்குமென திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளுக்கு தீர்வு வழங்காமல், பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது கல்முனையில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு பாரிய இழப்பை  ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்கிழக்கின் முகவெற்றிலை கல்முனையாகும். முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வர்த்தக பூமியாகவும் இது திகழ்கிகறது. இதனை விட்டுக்கொடுக்க முடியாது. இவ்விவகாரத்தை முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளுள் ஒன்றாகக் கொண்டு சென்று நியாயமாகத் தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டமொன்று சம்மாந்துறை பத்ர் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  

4 comments:

  1. மதிப்புக்குரிய எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களே. மெதுவாகவேனும் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. தீர்வு பேச்சுக்கள் கல்முனை வடக்கு சபையை முஸ்லிம்கள் எதிர்க்கவில்லை எல்லைகள் பற்றி பேசவேண்டும் என்கிற இடம்வரை நெடுந்தூரம் முன்னேறியுள்ள நிலையில் மீண்டும் வேதாளத்தை முருக்க மரத்தில் ஏற்றாதீர்கள். கல்முனைப் பிரச்சினையை சிங்கள அரசியல் வாதிகளின் தலையீடோ வெளியார் தலையீடோ இலாமல் நமக்குள் தீர்த்துக்கொள்ளுவது மட்டுமே தமிழ் முஸ்லிம் நலன்களுக்கும் நல்லுறவுக்கும் நல்லது.

    ReplyDelete
  2. இனவாதிகலின் கோரிக்கை அது.அவர்கள் எதிர்வரும் தேர்தலுக்காக இப்போதே இனவாத நடவ்டிக்கைகலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

    ReplyDelete
  3. கல்முனை நகரம் தெற்கே தரவையடி பிள்ளையார் கோவில் வடக்கே தாளவாட்டுவான் சந்தி வரையிலுமான எல்லைகளைக் கொண்டது இந்த பகுதியில் 95% மக்கள் தமிழர்களும் அவர்களுக்கு சொந்தமான நிலமும் உள்ளது அண்ணளவாக 5% இலங்கை சோனக சமூகமும் வசிக்கிறார்கள். மிக முக்கிய விஷயம் இந்த பகுதி முழுவதும் நில தொடர்பு உள்ள பகுதிகள் இஸ்லாமியருக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் மாத்திரம் வைத்து கொண்டு எப்படி உங்கள் சமூகத்தால் எங்களுடைய உரிமையை தட்டி பறிக்க முடியும்?

    ReplyDelete
  4. பகுத்தரிவாலன் போய் பாய் விரித்து தூங்கு,கனவிலேனும் உன் ஆசை நிறைவேரட்டும் 😂😂😂

    ReplyDelete

Powered by Blogger.