Header Ads



82 மில்லியன் ரூபாய் பெறுமதியான, இரத்தினகல்லை திருடிய நபர் கைது

82 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மொரட்டுவ பேருந்து ஒன்றில் வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த ஒருவரிடம் இருந்து இரத்தினகல்லையும் 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலை ஒன்றையும் திருடியதாக முறைபாடு செய்யப்பட்டிருந்தது. 

பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபரிடம் இருந்து 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இரத்தினகல்லையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேகநபர் அலுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

No comments

Powered by Blogger.