Header Ads



இனவாத குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான 27 பள்ளிவாசல்களை புனர்­நிர்­மாணத்தில் தாமதம்

கடந்த மே மாதம் கம்­பஹா, குரு­நாகல் மற்றும் புத்­தளம் மாவட்­டங்­களில் இடம் பெற்ற வன்­செ­யல்­களின் போது சேதங்­க­ளுக்­குள்­ளான பள்­ளி­வா­சல்­களை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்குத் தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் இதற்­கென 67 ½ இலட்சம் ரூபா திறை­சே­ரி­யிடம் கோரப்­பட்­டுள்­ள­தா­கவும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் உதவிச் செய­லாளர் எம்.கே முஹைஸ் தெரி­வித்தார்.

பள்­ளி­வா­சல்­களின் புன­ர­மைப்புப் பணி­களின் தாம­தத்­திற்குக் காரணம் திறை­சே­ரி­யினால் உரிய நிதி இது­வரை வழங்­கப்­ப­டா­மையே எனவும் அவர் கூறினார்.

அவர் தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்,

“திறை­சேரி மூலம் உரிய நிதி வழங்­கப்­பட்­டதும் மாவட்ட செய­லா­ளர்கள் ஊடாக திருத்­தப்­ப­ணிகள் இடம்­பெறும் திருத்­தப்­ப­ணி­க­ளுக்கு இரா­ணு­வத்தின் உத­வியும் பெற்றுக் கொள்­ளப்­படும்.

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள பள்­ளி­வா­சல்­களின் சேத விப­ரங்கள் மாவட்ட செய­ல­கங்­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் மற்றும் தொழி­நுட்ப அதி­கா­ரிகள் மூலம் கணக்­கி­டப்­பட்­டுள்­ளன.

சேதங்­க­ளுக்­குள்­ளான 27 பள்­ளி­வா­சல்கள் புன­ர­மைக்­கப்­படவுள்ளன.மேல­தி­க­மாக சேதங்­க­ளுக்­குள்­ளான 4 பள்­ளி­வா­சல்­களின் விண்­ணப்­பங்கள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அவ்­விண்­ணப்­பங்­களும் கவ­னத்திற் கொள்­ளப்­பட்­டுள்­ளன.

பள்­ளி­வா­சல்­களைப் புன­ர­மைப்­ப­தற்கும் தேவை­யான நிதி­யினை திறை­சே­ரி­யி­லி­ருந்து பெற்றுக் கொள்­வ­தற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. தேவை­யான நிதி­யினைப் பெற்­றுக்­கொள்­வதை துரி­தப்­ப­டுத்­து­மாறு முஸ்லிம் சமய விவகார அமைச்சரும் அமைச்சின் செயலாளரும் நிதியமைச்சரைக் கோரியுள்ளார்கள்.

திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் புனரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.

ஏ.ஆர்.ஏ. பரீல்

No comments

Powered by Blogger.