ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல், 10 பேர் காயம் - பாதுகாப்புக்கு இராணும், பொலிஸார் நிறுத்தம்
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் எற்பட்ட மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு நேற்று மோதலில் முடிவடைந்துள்ளது.
இதனால் காயதடைந்த 10 மாணவர்கள் மற்றும் ஒரு கல்விசாரா ஊழியரும் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் மாத்தறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.
உயர் கல்வி கற்கும் போதே வன்முறையும் சேர்ந்து கற்க வேண்டிய சூழழ்
ReplyDelete