மகாநாயக்க தேரர்களை செவ்வாய், சந்திக்கவுள்ள முஸ்லிம் Mp கள்
எமது ராஜினாமா தொடர்பாக மகாநாயக்க தேரர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து தெளிவுபடுத்துவோம் என முன்னாள் அமைச்சர் எச்.எம்.ஏ, ஹலீம் சபையில் தெரிவித்தார்.
நாம் எமது மக்களுக்காகவே அமைச்சுப்பதவிகளை துறந்தோமே தவிர ரிஷாத் பதியுதீனுக்காக பதவி துறக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் சில ஊடகங்கள் மேற்கொண்ட பொய் பிரசாரம் காரணமாக முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு நெருக்குவாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
முஸ்லிம் மக்களை சந்தேக கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தன. அதனால் எமக்கெதிராக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவே நாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்தோம்.
அத்துடன் எம்மை மீண்டும் அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் எம்மிடம் கோரியுள்ளனர். நாம் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை மதிக்கின்றோம். அதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மகாநாயக்க தேரர்களை சந்தித்து எமது இராஜினாமாவுக்கான காரணங்கள், எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தெளிவுபடுத்தவுள்ளோம் என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
அமைச்சுகளை மறுபடி எடுத்தால் எல்லாம் நாடகமாக போய்விடும்.விமல் வீரவன்ச சொன்னது உன்மையாகிவிடும்.எதிரியை வெல்ல விடவேண்டாம்.please.
ReplyDeleteபதவிகளை மீழப்பெறுவத்கான முயற்சிகள் நடக்குது போல
ReplyDeleteஇவர்களை சந்தித்து இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமியர்களைப் பற்றியும் மத்ரசாக்களைப் பற்றியும் முஸ்லிம்களின் இலக்கு பற்றியும் நாங்கள் எதற்கு அஞ்சுவோம் எதற்கு அஞ்சோம் என்பது பற்றியும் இலங்கை முஸ்லீம்கள் பற்றி உலக முஸ்லீம்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் தெளிவாக பேசுங்கள் ,
ReplyDeleteரிஷாத் பதியுதீன் நிரபராதி என்று நிரூபிக்கும் வரை பதவியேற்க கூடாது
ReplyDelete