நாளை முஸ்ஸிம், பாடசாலைகள் திறக்கப்படுகின்றன - இன்று தீவிர சோதனை
வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து முஸ்ஸிம் பாடசாலைகளிலும் இன்று -09- தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைக்காக முஸ்லிம் பாடசாலைகள் நாளைய தினம் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பாடசாலை சமூகத்தினருடன், பொலிஸார் இணைந்து பாடசாலையில் தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலை வளாகம் மற்றும் பாடசாலையின் கட்டடங்கள் என்பன தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
Post a Comment