காத்தான்குடி அரபு மயமாகிறதா? ஈச்சம்மரம் ஏன்? அரபு மொழி எதற்காக? அசராது பதில் கூறிய ஹிஸ்புல்லா
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால் சஹ்ரான் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருந் தார் என்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளித்தார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு அழைக்கபட்ட ஹிஸ்புல்லாஹ் இதனைக் குறிப்பிட்டார்,
அவரது சாட்சியத்தின் முழு விபரம் வருமாறு:
கேள்வி:- உங்களின் அரசியல் பயணம் குறித்து கூறுங்கள்?
பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக எனது அரசியல் வாழ்க்கை ஆரம்பிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானேன். பின்னர் பல வெற்றி, தோல்விகள் எனக்கு அமைந்தன. பிரதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளேன். பின்னர் ஜனவரி நான்காம் திகதி இராஜினாமா செய்யப்பட்டு கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டேன்.
கேள்வி:- காத்தான்குடி அடிப்படைவாத பகுதி என நம்புகிறீர்களா?
பதில் :- இல்லை
கேள்வி :- காத்தான்குடியில் எத்தனை மொழிகள் ?
பதில் : மூன்று மொழிகள்
கேள்வி :-அரபு மொழி ஏன் அங்கு?
பதில் :இங்கு மூன்று மொழிகள் உள்ளன. அரபிக் இங்கு இல்லை. ஆனால் சுற்றுலா துறைக்காக அரபிகள் வருவதால் எமக்கு அவர்களைக் கவர வேண்டும். அதற்காக நாம் இதனை செய்யவேண்டும். இது சட்ட விரோதமோ அரசியல் அமைப்பிற்கு மாறானதோ என நினைக்க முடியாது.
கேள்வி :- அரபிகள் ஏன் அரபி எழுத்தை பார்த்து வருகின்றனர். வேறு நாடுகளில் எமக்கு அப்படி இல்லையே?
பதில் :- அப்படி அல்ல, நாம் சுற்றுலாத் துறையை கவர இவற்றை செய்கின்றோம். கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரம் பெற்றோம்.
கேள்வி : -காத்தான்குடியில் ஈச்சம் மரம் நட என்ன காரணம்?
பதில் :- உண்மையில் காத்தான்குடியில் மரம் நட சில தீர்மானம் எடுத்தேன். பசியாலைக்கு சென்ற போது வேறு சில மரம் நட தீர்மானம் எடுத்தோம். ஆனால் எமது பிரதேச காலத்திற்கு ஏற்ப இவை சரிவரவில்லை ஆகவே ஈச்சம் நடலாம் என தீர்மானம் எடுத்தோம். எமது பிரதேச வெப்பத்துக்கு அமைய தீர்மானம் எடுத்தோம்.
கேள்வி: ஏன் பனைமரம் தெரிவுசெய்யவில்லை?
பதில் :- ஈச்சம் மரம் தெரிவு செய்தோம். பனை மரமும் நடலாம்
கேள்வி: இதனை அகற்றுவதற்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியை மாற்ற நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகின்றதே?
பதில்:-இது குறித்து வழக்கு இருப்பதால் நான் கருத்து கூறவில்லை
கேள்வி :- ஹிரா நிறுவனம் பற்றி கூறுங்களேன் ?
கேள்வி :-எவ்வளவு நிதி வந்தது
பதில் :- முன்னூற்று ஐம்பது மில்லியன்
கேள்வி: கிழக்கு பல்கலைக்கழக்கம் ?
பதில்:- நாம் எந்த இன மத அடிப்படையில் பார்த்தும் எடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை முஸ்லிம் மாணவர்கள் வந்தனர்.
கேள்வி: மகாவலி அபிவிருத்தி இடம் ஒன்றினை நீங்கள் பெற்றீர்கள் ஏன்?
பதில்:- ஆம், தற்காலிகமாக நிறுவனம் ஒன்றே இருந்தது, ஆகவே நிரந்தரமாக ஹீரா நிறுவனத்தை அமைக்க இதனை கோரினோம். அதன் பின்னர் உயர் கல்வி நிறுவனமாக நாம் கோரிக்கை அறிக்கை ஒன்றினை உயர் கல்வி அமைச்சுக்கு விடுத்தோம். இதில் சில முன்மொழிவுகளும் இருந்தன. ஆகவே மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் பெயரில் ஆவணங்கள் தயாரித்து மகாவலி நிறுவன நிலத்தை பெற்றுக்கொண்டோம். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசினால் அனுமதி கிடைக்கப்பட்டது. 35 ஏக்கர் இருந்தது.
கேள்வி:- நீங்கள் வகாப் வாதத்தை ஆதரிகின்றீர்களா ?
பதில் :- இல்லை, ஒருபோதும் ஆதரிக்கவில்லை.
கேள்வி :- கிழக்கு பல்கலைக்கழகம் ஷரிஆ பல்கலைக்கழகமா?
பதில்:- அவ்வாறு ஒன்றும் இல்லை, நான் இதனை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க சகல விதத்திலும் தயாராக உள்ளேன். ஆனால் ஊடகங்கள் இதனை தவறுதலாக விமர்சித்து வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தில் நிர்வாக அதிகாரிகள் சிங்களவர்கள். அவர்களின் பெயர்களை நான் கூற விரும்பவில்லை. சிலர் தனியார் பல்கலைக்கழகத்தை விரும்பவில்லை. சைட்டம் மூடப்பட்டது. அதுபோன்று எங்களையும் இலக்கு வைக்கின்றனர். நான் எந்த இணக்கத்துக்கும் தயாராக உள்ளேன். இது எமது அப்பாவி மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. நான் ஒரு சமூக சேவையாக இதனை பார்க்கிறேன். எமது மக்களுக்காக நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன்.
கேள்வி :- ஹிரா மூலம் எத்தனை பள்ளிவாசல் உருவாக்கப்பட்டது
பதில் :- நிறைய அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி :- சவூதி நிதி வருகின்றது, அவர்கள் சூபிக்களுக்கு ஆதரவு வழங்குவது இல்லையே ?
பதில் :- அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் நிதி எனக்கு வருகின்றது. எனக்கு பிரிவினை முக்கியம் இல்லை. மக்களின் சேவகனாக நான் சேவை செய்கின்றேன். தமிழ் மக்களுக்கும் உதவி செய்துள்ளேன்.
கேள்வி :- அப்துல் ராசிக் யாரென்று தெரியுமா
பதில் :ஆம்
கேள்வி : அவருடன் உங்களின் பழக்கம் எப்படி?
பதில் : தொலைபேசியில் பேசியுள்ளோம். இந்த பிரச்சினைகளின் பின்னர் பேசினார். இரு தினங்களுக்கு முன்னரும் பேசினேன்.
கேள்வி :- அவருடன் உங்களுக்கு நெருக்கமான நட்பு உள்ளதா?
பதில் :-அப்படி என்று இல்லை, இந்த பிரச்சினைக்கு பின்னர் பேசினோம்.
கேள்வி :அவர் ஐ.எஸ். கொடிகளுடன் கிழக்கில் செயற்பட்டாரா?
பதில் :அப்படி ஒன்றும் எனக்கு தெரியாது
அவர் ஐ.எஸ். பயங்கரவாதத்திற்கு ஆதரவாக உள்ளதாக இங்கு வந்த இருவர் கூறினார்கள்?
பதில் :- அவற்றை நான் கேட்டதில்லை, ஆனால் தௌவ்ஹித் என்ற பெயருக்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒருவர் பயங்கரவாதி என்றால் அவரை விசாரிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவரும் பயங்கரவாதி என கூற முடியாது. ராசிக் ஐ.எஸ். என்று எனக்கு தெரியாது.
கேள்வி :- காத்தான்குடியை அரபு மயமாக்கியது நீங்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது, இதனை இல்லை என்கிறீர்களா?
பதில்: இது அரபு மயம் அல்ல. எமது மக்களின் அடையாளம் அவ்வாறு உள்ளதால் அதனுடன் இணைந்து செல்லும் வகையில் செய்தோம். கட்டடக்கலை தானே? யாழில் இந்து கலாசார முறைமை உள்ளது, தெற்கில் பெளத்த முறைமை உள்ளது. அது போன்று தான்.
கேள்வி:- சஹ்ரான் கட்டளைகளை விதித்த காலத்தில் கூட உங்களுக்கு அவரின் நிலைமை புரியவில்லையா?
பதில்:- அவர் அடிப்படைவாதிதான். ஆரம்பத்தில் இருந்து அவர் அடிப்படைவாதி என்று தெரியும். ஆனால் அவர் பயங்கரவாதி என எனக்கு தெரியாது.
It was asked why Arabic language is needed in Sri Lanka. Without asking it from Mr Hisbullah they could have asked COMPANIES like Munchee biscuit manufacturer why they are using Arabic language along with other languages in the biscuits containers which is marketed in Sri Lanka. They were doing it for a long time in order to get enticed the Arabian customers.
ReplyDeleteIt was asked why Arabic language is needed in Sri Lanka. Without asking it from Mr Hisbullah they could have asked COMPANIES like Munchee biscuit manufacturer why they are using Arabic language along with other languages in the biscuits containers which is marketed in Sri Lanka. They were doing it for a long time in order to get enticed the Arabian customers.
ReplyDeleteஹிஸ்புல்லா சொல்வது எல்லாம் பொய்
ReplyDeleteDATE TREES,.......
ReplyDeleteIS IT A PROHIBITED TREE
TO PLANT IN SRILANKA.
DONT ANYONE
THINK, ITS BETTER TO PLANT
DATE TREES,
RATHER THAN PLANTING GANJA
TREES.