பதவிகளை தூக்கி எறிந்த, முஸ்லிம் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு...!
தட்டுங்கள் திறக்கும் .
************
பதவிகளை தூக்கி எறிந்த அமைச்சர்கள் கூட்டாக மகா சங்கத்தினரை சந்தித்து
1.அமைச்சர்,ஆளுனர்கள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தவும் ,
2.அப்பாவிகள் அனைவரையும் இரண்டு கிழமைகளுக்குள் விடுதலை செய்யவும் ,
3. இனவாதத்தை தூண்டும் துறவிகளுக்கு துறவறம் பற்றி போதிக்கவும் ,
அவர்களது பலத்தை பிரயோகித்து உதவுமாறும் , அவை நிறைவேறியதன் பிறகு மகாசங்கத்தினரின் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவதாகவும் ,
அவர்களது வேண்டுதலை மதிப்பதாகவும் சொல்லிவிடுவது முக்கியம்.
சமூகத்தின் சுயமரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளும் வரை தமக்கு கால அவகாசம் தருமாறு பணிவுடன் வேண்டுதலை முன் வைப்பது நல்லது.
நாம் உடனடியாக இதனை செய்யாது விடுவது அவர்களின் வேண்டுகோளை உதாசீனம் செய்ததாக அர்த்தம் கொள்ளச்செய்யும் அபாயம் உள்ளது.
அது பிரச்சினைகளை விஸ்வரூபம் கொள்ள வைக்கும் வல்லமை மிக்கது.
நமது சமய , அரசியல் தலைமைகள் இந்த பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்தி உறவுப்பாலத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தேரவாத பௌத்த கொள்கையுள்ள பெரும்பான்மை சமூகத்தை கொண்ட நாட்டில், அரசியல் முடிவுகளில் தேரர்கள் பலம் பொருந்தியவர்கள் என்பதை நாம் மறந்து விடலாகாது.
நம் அரசியல் தலைமைகள் , நம்மைவிட நூறு மடங்கு தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள்.
எனவே நான் இந்த பதிவை இட முன்னரே நம் தலைமைகள் நல்லதொரு வாய்ப்பான இதன் உச்ச பலன்களை பெற முடிவுசெய்திருப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்குண்டு.
அல்ஹம்துலில்லாஹ்!
Post a Comment