மத்ரஸா ஒன்றிற்கு எதிரான, ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது
தெஹிவளை பொலிஸ் பிரிவில் சங்கைக்குரிய அக்மீமன தயாரட்ன தேரர் உள்ளிட்ட குழுவொன்று இன்று -07- நடத்தவிருந்த ஊர்வலத்திற்கும் கூட்டத்திற்கும் நீதிமன்றம் முற்று முழுதாக தடை விதித்துள்ளது.
இந்த கூட்டத்தின் மூலம் அமைதி சீர்குலைந்து மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்படலாம் என தெஹிவளை பொலிஸார் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்கள்.
புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்று மஜிஸ்ரேட் நீதிமன்றம் ஊர்வலத்திற்கும் கூட்டத்திற்கும் தடை விதித்துள்ளது.
சிங்கள ராவாய அமைப்பின் தலைவரான அக்மீமன தயாரத்ன தேரரினால் தெஹிவளை ஜயசிங்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று மத்ரஸா ஒன்றிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார்.
Aren't they know there is an emergency order in the country???
ReplyDeletePlease look at his face. Look like a criminal.
ReplyDelete