Header Ads



மரணத் தண்டனை ஐ.தே.க.யின் கொள்கைகளுக்கு முரணான செயல், ஜனாதிபதியுடன் பேசுவோம் - ரணில்

மரணத் தண்டனையை அமுல்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முழுமையாக முரணான செயலென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பிரதான 4 குழுக்கள் மரணத் தண்டனை யோசனைக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், எனவே இந்த விடயம் தொடர்பில், அமைச்சர்கள், ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் இன்று -30- இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.