Header Ads



"பொலிஸ்மா அதிபரைகூட பதவிவிலக்க முடியாத, ஜனாதிபதி உள்ள நாடு இலங்கைதான்"

19 ஆவது அரசியலமைப்பின் மூலம் தற்போது பாரளுமன்றத்தின் நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

19 ஆவது அரசியலமைப்பின் அடிப்படையில் பாராளுமன்றத்தை ஒன்று கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

19 ஆவது அரசியலமைப்பினால் பாராளுமன்ற அமைச்சரவைக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொலிஸ் மா அதிபரை கூட பதவி விலக்க முடியாத ஜனாதிபதி உள்ள நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.