கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அவரை ஆதரிக்க போவதில்லை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அவரை ஆதரிக்க போவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றுக்காக சென்றிருந்த போது செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான் இந்த நிலைப்பாட்டை கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக கூறி வருகிறேன்.
கொலை செய்யும் பின்னணியை கொண்ட ஒருவர் இருப்பாராக இருந்தால், அந்த நபர் கொலை செய்தார் என்று மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தால், நான் அவருக்கு ஆதரவளிக்க மாட்டேன். அனைத்து அரசாங்கங்களும் தனது அதிகாரத்தை பாதுகாக்க கொலைகளை செய்துள்ளதாகவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.
Our nation needs the politicians as like Hon.Kumara welgama
ReplyDeleteதைரியமான சிறந்த அரசியல்வாதி.
ReplyDeleteas long as he is with "Mottu" and its supporters we cannot recognize him?
ReplyDelete