Header Ads



திரில் ஆட்டத்தில், போராடி தோற்றது ஆப்கானிஸ்தான்


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று லீட்சில் நடைபெற்ற 36-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதியது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்தீன் நயீப் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹமத் ஷா, குல்பதீன் நயீப் களமிறங்கினர். நயீப் 15 ரன்னிலும், ஹஸ்மதுல்லா ஷஹிதி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ரஹமத் ஷா 35 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய அஸ்கர் ஆப்கன் 42 ரன்னிலும், நஜ்புல்லா சட்ரன் 42 ரன்னிலும் வெளியேறினர். 

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷஹிப் அப்ரிதி 4 விக்கெட்டும், இமாத் வாசிம், வஹாப் ரியாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்கவீரர் பாக்கர் சமான் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பாபர் ஆசாம் 45 ரன்கள் அடித்தார். 

இறுதியில் பாகிஸ்தான் அணி 49.4 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டியது. அந்த அணியின் இமாத் வாசிம் 49 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். 

No comments

Powered by Blogger.