ஈஸ்டர் தாக்குதலின் பின் முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்படவில்லையா..? பொய் சொல்லும் ரணில்
பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனையும் பிரிவினைவாதிகள் சிலர், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் ஊடாக 250 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து வன்முறைகள் இரத்தம் சிந்தும் வகையில் பரவாமைக்கு நாட்டில் காணப்பட்ட நல்லிணக்கமே காரணம் எனவும், இதனால் நாட்டு மக்களுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு நாட்டில் உள்ள மத்ரசா கல்வி நிறுவனங்கள் தொடர்பில் சட்டங்கள் இயற்றப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பல இடங்களில் நடந்தன. இதில் உயிர் இழப்புகளும், காயங்களும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை யாவரும் அறிந்த உண்மையே.
ஈஸ்டர் தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பல இடங்களில் நடந்தன. இதில் உயிர் இழப்புகளும், காயங்களும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டமை யாவரும் அறிந்த உண்மையே.
Post a Comment