Header Ads



ஏறாவூரில் இப்படியும் ஒரு, நல்ல மனிதர்

செங்கலடி மக்கள் வங்கி ATM இயந்திரத்தில் இன்று _14_ மாலை பணம் எடுக்க சென்ற ஏறாவூரை சேர்ந்த சகோதரர் ஒருவர்,

ATM அட்டையை உட்செலுத்த முயற்சிக்கையில், 

இயந்திர திரையில் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற வாசகம் வர, குனிந்து பார்த்த போது குறித்த பணத்தொகை ஏற்கனவே வெளியேறியிருந்துள்ளது.

இப் பணம் தனக்கு முன்பாக பணம் எடுக்க வந்தவருடையதாகயிருக்கும் எனக் கருதி, தான் எடுக்கச்சென்ற பணத்தை ATM ஊடாக பெற்றுக்கொள்ளாமல், அப் பணத்தை கையிலெடுத்துக்கொண்டு எனது வீடுவந்து சற்றுமுன் என்னிடம் ஒப்படைத்தார்.

யாருடைய பணம் என்பதை இன்ஷாஅல்லாஹ் திங்களன்று வங்கிக்கு சென்று முகாமையாளரிடம் விடயத்தை தெரிவித்த பின்பே அறியக் கூடியதாகயிருக்கும்.

பணத்தொகையும், பணம் பெறப்பட்ட நேரமும் வங்கி முகாமையாளரிடமே சொல்லப்படும்.

பணத்தை என்னிடம் கையளித்த ஏறாவூர் சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Mohamed Nasir

No comments

Powered by Blogger.