Header Ads



சஹ்ரானின் முகாமில் இருந்து, தலைகளை வெட்டிச் சாய்க்கும் வாள்கள் மீட்பு

மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் முகாமில் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள், வாள்கள், ஜெலக்னைட் குச்சிகள், டெட்டனேற்றர்கள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முகமட் மில்கான் என்பவரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் பெருமளவு வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் சஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றை கடந்த மாதம் பொலிஸார் கண்டுபிடித்தனர். 

இந்த முகாம் பகுதியில் நேற்று கொழும்பில் இருந்து முகமட் மில்கானை அழைத்துவந்து நிலத்தை தோண்டும் நடவடிக்கை மேற்கொண்டனர். 

இதன் போது எஸ்லோன் பைப்பில் அடைத்து பாதுகாப்பாக நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 392 ஜெலக்னைட் குச்சிகள், எட்சோட் ரக வெடிமருந்து 8 கிலோ, சேருவின் 184 யார் கொண்ட 4 பக்கற்றுக்கள், ரி 56 ரக துப்பாக்கியின் 361 ரவைகள், எம் 16 ரக துப்பாக்கியின் ரவைகள் 80, திருப்பாச்சி வாள்கள் 11, சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்காக வெட்டப்படும் மதினா 19 புது வாள்கள், டெட்டனேற்றர்கள் 1500 என்பனவற்றை குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

(சரவணன்)

No comments

Powered by Blogger.