Header Ads



சத்தியாக்கிரகத்தை முடித்துவைத்து, ஹரீஸ் ஆற்றிய உரை

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தடை செய்யக்கோரி முஸ்லிம் தரப்பால் மேற்கொள்ளும் சத்தியாகிரகம் நான்காவது நாளாகவும் கல்முனை சாந்தான்கேணி ஐக்கிய சதுக்கத்தில்  இடம் பெற்ற நிலையில்  (23) இன்று நண்பகல் தற்காலிகமாக முடிவுக்கு வர்ப்பட்டுள்ளது. இதன் போது அங்கு கலந்து கொண்ட முன்னாள் இராஜங்க அமைச்சர் அங்கு உராயாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இரு சமூகங்களும் இணக்கப்பாடு ஏற்ப்படும் வகையில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய ப்பட்டு அதற்க்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பாக முஸ்லிம் சமூகம் இழ்ந்து நிற்க்கின்ற தங்களுடைய காணிகள்,வயல் நிலங்கள்  மற்றும் ஏனைய விடயங்களை புதிய எல்லை நிர்ணயம் செய்யப்படுகின்றபோது முஸ்லிம் சமுகத்திற்க்கு  ஏற்படுகின்ற அநீதியை போக்கி இப் பிராந்தியதின் புத்திஜீவிகள் ,சிவில் அமைப்பினர் கொடுகின்ற கோரிக்கையை பரீசிலனை செய்து அவற்றினை இணக்கப்பாட்டுக்கு வருகின்ற போது இதனை  தீர்த்து தருவதாக  வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் 

இதே விடயம் கல்முனை தமிழ் தரப்பு பிரதிநிதிகளிடமும் இப் பிரச்சினை சம்பந்த மாக அரச உயர் மட்ட தலைவர்கள் குறிப்பாக மத தலைவர்கள் நேற்று(22) வருகை தந்த  ஞனாசார தேரர் உட்பட பலர் பேச்சுவார்த்தை  நடாத்தி இப் பிரச்சினைக்கு அவர்களுடைய விடயம் சம்பந்தமாகவும் புதிய எல்லை நிர்ணய குழு முலமாகவும் தீர்வு காண பேசப்பட்டுள்ளது  எனவே அவர்கள் அந்த விடயத்தை ஏற்றுக்கொண்டு நேற்று அவர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் கை விடப்பட்டிருந்தது இருந்து அவர்களின் சத்தியாக போராட்டம் தொடர்ந்திருந்தது அதே போன்று எங்களுடைய சத்தியாக போராட்டம் தொடர்ந்திருந்தது .

 அரச உயர் மட்ட தலைவர்கள் ,பொலிஸ் உயர் அதிகாரிகள் தலையிட்டு  இரண்டு தர்ப்பிடம் இன்று (23). காலை நேரம் பேசி இருந்தார்கள் இந்த  போராட்டத்தை கை விடுமாறு கோரினர் பேச்சு வார்த்தை மூலம் முடிவு வர இருப்பதானால் அரசின் கோரிக்கையை அடுத்து தமிழ் தரப்பு உண்ணாவிரத்தை கை விட்டதாக ஊடகங்கள் மூலம்  அறிவித்த நிலையில் எங்களிடமும் பொலிஸார் இவ்வாறான ஓர் முடிவை தமிழ் சமூகம் எடுத்துள்ள நிலையில் நீங்களும் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சுமுகமான முறையில் இப் போராட்டத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புங்கள் என்ற அழைப்பிதழை எங்களுடைய பள்ளிவாசல் சமுகம் ,வர்த்தகர் ,அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்பினர் எல்லோரும் இந்த அழைப்பை ஏற்று இந்த நிமிடத்திலிருந்து இந்த சத்தியாகிரக போரட்டத்தை தற்காலிகமாக கை விடுகிறோம் ஏனென்றால் நாங்கள் ஜனநாயக்த்தை விரும்புகிறோம் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் இது ஓர் நிர்வாக அலகு. சம்பந்தப்பட்ட பிரச்சினை எங்களுக்கான நியாயங்கள் சட்ட ரீதியாக உள்ளது இதனை பேச்சுவார்த்தை மூலம் காணும் நம்பிக்கை உள்ளது தயவு செய்து நூற்றாண்டுகாலமாக இருந்து தமிழ் ,முஸ்லிம் மக்களின் இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என   அரசியல்வாதிகளுக்கு உருக்கமான வேண்டுகோளையும் இவ்விடத்தில்  தெரிவித்தார்.

1 comment:

  1. வரவேற்க்க வேண்டிய பேச்சு. மதிப்புக்குரிய ஹரிஸ் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete

Powered by Blogger.