இன்றுமுதல் கடுமையாக, அமுலாகும் சட்டம்
இலங்கையின் பிரதான நகரங்களில் இன்று -10- முதல் கடுமையான போக்குவரத்து நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
வாகன நெரிசல்களை மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் வீதியின் நிரல் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் வீதியின் இடது பக்கத்தில் செல்ல வேண்டும். கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதான வீதிகளில் இந்த பஸ்களுக்காக பிரதான வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கல்கிசை வெலிக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முக்கிய வீதி நிரல் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இடது புறத்தில் பொது போக்குவரத்து பஸ்கள் செல்லும் நடைமுறை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment