Header Ads



பதவி விலகிய முஸ்லிம் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை? - ஜனாதிபதி நாடு திரும்பியதும் தீர்மானம்


பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு இன்னும் திரும்பபெறப்படவில்லை என தெரியவருகிறது.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை நீக்குவதா, இல்லையா என்பது குறித்து பாதுகாப்பு சபை கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.

இதனடிப்படையில் அடுத்த பாதுகாப்பு சபை கூட்டத்தில் இது சம்பந்தமாக தீர்மானிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தஜிகிஸ்தான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளைய தினம் நாடு திரும்புகிறார். ஜனாதிபதி நாடு திரும்பியதும் அடுத்த பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.