Header Ads



முஸ்­லிம்­க­ளிடத்தில் "ஹீரோ" ஆகும் மங்கள - அவரைப்போன்று எவரும் உதவவில்லை என இடித்துரைப்பு


முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொய் பிர­சா­ரங்கள் மற்றும் வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பத்தில் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவைத் தவிர எந்­த­வொரு ஐக்­கிய தேசியக் கட்சி அமைச்­சர்­களும் எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் சுட்­டிக்­காட்­டினர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு முன்னர் அலரி மாளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஆளும் தரப்பு முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­த­போதே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இது தொடர்பில் திரு­கோ­ண­மலை மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் விப­ரிக்­கையில்,

முஸ்­லிம்கள் சம­கா­லத்தில் எதிர்­நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பில் அனை­வ­ரு­மாக இணைந்து சுட்­டிக்­காட்­டினோம். அத்­துடன் வேண்­டு­மென்றே பாது­காப்பு கெடு­பி­டிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் சிறு குற்­றங்­க­ளுக்­காக கைது­செய்­யப்­பட்டு பயங்­க­ர­வா­திகள் போல் சித்­தி­ரிக்­கப்­ப­டு­வது குறித்து பிர­த­மரை தெளி­வு­ப­டுத்­தினோம்.

இதன்­போது ஐ.தே.க. தவி­சாளர் கபீர் ஹாசிம் மிகவும் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கதைத்தார். நாம் வெறு­மனே இரா­ஜி­னாமா செய்யக் கூடாது. எமது இரா­ஜி­னாமா நாட்­டுக்கு நல்­ல­தொரு பாடத்தை சொல்ல வேண்டும் என்­பதை பிர­த­ம­ரிடம் தெளி­வு­ப­டுத்­தினார். அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தை தடுப்­ப­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கையை தான் முன்­னெ­டுத்­த­போது தடை ஏற்­பட்­டது. எனினும், விசா­ர­ணை­க­ளுக்­கான ஆரம்பப் புள்­ளியை நான் காட்­டி­யி­ருந்தும் நட­வ­டிக்கை பொறுப்­புடன் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தையும் சுட்­டிக்­காட்­டினார்.

மு.கா. தலைவர் ஹக்கீம் அநா­வ­சிய கைதுகள் மற்றும் அப்­பா­விகள் சிறு சிறு குற்­றங்­க­ளுக்­காக பயங்­க­ர­வாத தடுப்பு சட்­டத்தின் கீழ் விளக்­க­ம­றி­யலில் இருப்­பது பற்­றியும் தெளி­வு­ப­டுத்­தினார்.

தான் நிர­ப­ராதி என்­பதை அர­சி­யல்­வா­தி­களே, அதா­வது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிர­தி­நி­தி­களே ஏற்­றுக்­கொள்­கி­றார்கள் இல்லை என்­பதை இதன்­போது அ.இ.ம.கா. தலைவர் ரிஷாத் பதி­யுதீன் சுட்­டிக்­காட்­டினார். மட்­டு­மன்றி, தன்னை தான் குற்­ற­மற்­றவன் என்­பதை விப­ரிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்­தையும் ஐ.தே.க. அமைச்­சர்கள் தரு­வ­தில்லை என்றும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, அமைச்சர் மங்­கள சம­ர­வீர முஸ்லிம் அமைச்­சர்கள் பதவி துறப்­ப­தற்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்டார். அப்­ப­டி­யானால் முதலில் தான் அமைச்சுப் பத­வியை தூக்கி எறி­வ­தாக ஆவே­சத்­துடன் கூறினார். அமைச்சர் மனோ கணே­சனும் இவ்­வாறு கடு­மை­யாக எதிர்ப்பை தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் முஸ்­லிம்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­போது எமக்கு உதவ முன்­வ­ர­வில்லை என ஐ.தே.க.வின் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் இதன்­போது குற்­றச்­சாட்டை முன்­வைத்­தனர். அமைச்சர் மங்­கள சம­ர­வீர மட்­டுமே துணிந்து எமக்­காகப் பேசினார். அவரைப் போன்ற அமைச்சர்கள் இருந்­தி­ருந்தால் இன­வா­தி­க­ளுக்கு நல்ல பாடத்தை கற்­பித்­தி­ருக்­கலாம். முஸ்­லிம்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்­க­ளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும், ஆனால் எமது தரப்பினர் அதனை செய்யத் தவறி விட்டனர் என்பதை சுட்டிக்காட்டியதாக இம்ரான் மஹ்ரூப் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. They should have pointed out that the government is useless and inefficient in controlling the Army and Police and protecting the muslim communities from the snhala Mobs.

    ReplyDelete
  2. Government was not useless it was their command for the Police and forces to allowed the Buddhist Racist to attack Muslims properties. ( Its very Clear Government/Political Plane). Also ISIS also Political plan..

    ReplyDelete

Powered by Blogger.