Header Ads



முஸ்லிம் தாய்மார்கள் தமது, பிள்ளைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் - ஞானசாரர்

பீஸ் தொலைக்காட்சியில் சொற்பொழிவாற்றும் சாக்கீர் நாயக்கர் தற்கொலை குண்டுத் தாக்குதலை அனுமதிப்பவர், அவருடன் எமது நாட்டின் பல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உண்டு. அவை தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

சாக்கீர் நாயக்கருக்கு லண்டனுக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் அவர் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்று. ஆனால் இலங்கைக்கு வருவதற்கு அவருக்குத் தடையில்லை. ஏனென்றால் சாக்கீர் நாயக்கர் கறுப்புப் பணத்தை மாற்றுபவர்.

எனவேதான் எமது நாட்டில் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்குபவர்கள் அவரை நாட்டுக்குள் அனுமதிக்கின்றனர்.

இந்த நாட்டில் பல்வேறு தரப்பிலான முஸ்லிம்கள் வகாப் வாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறியுள்ளேன். இந்த நாட்டில் அப்பாவி முஸ்லிம் பிள்ளைகளை மத்ரஸா என்ற பெயரில் அவர்களது மனங்களில் மதவாதத்தை திணிக்கின்றார்கள்.

அரபு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் பணத்தைக்கொண்டு பல்வேறு மத்ரஸாக்களை உருவாக்குகின்றார்கள்.

முன்பு பள்ளிவாசல்களில் மாத்திரம்தான் மத்ரஸாக்கள் இருந்தன. ஆனால் இன்று பட்டிதொட்டியெல்லாம் மத்ரஸாக்கள் முளைத்துள்ளன.

முஸ்லிம் தாய்மார்கள் தமது பிள்ளைகள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். வகாப் வாதம் எமது நாட்டில் சகல கலாச்சாரங்களையும் அழிக்க முனைகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

9 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இந்த அரசாங்கம் இந்த ராணுவத்தினரும் இந்த ஞானசார தேரரை இப்படியே விட்டுவிட்டால் நாடு சுடுகாடாக மாறும் அதில் சந்தேகமில்லை இவரை கட்டுப்படுத்திவிட்டால் நாடு சுபிட்சம் பெறும் இவர் காட்டிய கூத்தில் தான் தீவிரவாதம் உருவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தாள் இந்த இனவாதிகள் ஓடு வாழமுடியாது என்று நினைத்து முஸ்லிம்கள் அனைவரும் தனி நாடு கேட்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் தமிழ் பேசும் இந்து மக்களும் போராடியது போன்று முஸ்லிம் மக்களும் போராட வேண்டி வர வாய்ப்பு இருக்கின்றது ராணுவத்தினரும் இந்த அரசும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் இவர்களைப் போன்றவர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete
  3. இந்த அரசாங்கம் இந்த ராணுவத்தினரும் இந்த ஞானசார தேரரை இப்படியே விட்டுவிட்டால் நாடு சுடுகாடாக மாறும் அதில் சந்தேகமில்லை இவரை கட்டுப்படுத்திவிட்டால் நாடு சுபிட்சம் பெறும் இவர் காட்டிய கூத்தில் தான் தீவிரவாதம் உருவானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவர் இப்படியே பேசிக் கொண்டிருந்தாள் இந்த இனவாதிகள் ஓடு வாழமுடியாது என்று நினைத்து முஸ்லிம்கள் அனைவரும் தனி நாடு கேட்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் தமிழ் பேசும் இந்து மக்களும் போராடியது போன்று முஸ்லிம் மக்களும் போராட வேண்டி வர வாய்ப்பு இருக்கின்றது ராணுவத்தினரும் இந்த அரசும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும் இவர்களைப் போன்றவர்களை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்.

    ReplyDelete
  4. எங்கள் பிள்ளைகளும் மதரஸாக்களும் சரியாகத்தான் இயங்குகின்றது நீங்கள் இனவாதத்தை விதிக்கிறார்கள் அதற்கு எதிராக என்ன செய்வதென்று அறியாமல் தீவிரவாதத்தில் குதிக்கும் சிலரை வைத்து எல்லாம் உங்கள் மீதும் நீங்கள் பழி சுமத்த நாடுகின்றீர்கள்... அப்படியாயின் ஆரம்ப காலத்தில் நீங்கள் தான் எல்லாவற்றையும் செய்து வந்தீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள் ஞானசார தேரர் அவர்களே...

    ReplyDelete
  5. Jakir Nayik சத்தயத்தை தெளிவாக சொல்வாதால் மக்கள் உண்மையை விளங்கிடுவார்கள் என்ற பயம் அதுதான் இப்படி சொல்கிறான்

    ReplyDelete
  6. Jakir Nayik சத்தயத்தை தெளிவாக சொல்வாதால் மக்கள் உண்மையை விளங்கிடுவார்கள் என்ற பயம் அதுதான் இப்படி சொல்கிறான்

    ReplyDelete
  7. அரண்டழன்ட கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இந்தப் பேயனுக்கும் இதான் நிலை

    ReplyDelete
  8. Zahir Naik is a joke on real debates.

    ReplyDelete
  9. How many trillion getting from Indan Row or BJP Nasist Modi. And World Terrorist Countries (sach as USA, ISRAEL AND INDIA) are planning distroyed our mother land.

    ReplyDelete

Powered by Blogger.