Header Ads



மனைவியின் மரணச்செய்தி கேட்டு, கணவரும் மரணம் - சோகத்தில் ஆழ்ந்துள்ள ஊர்

87 வயதுடைய வயோதிப தம்பதி ஒரே நாளில் உயிரிழந்த சோக சம்பவம் மொனறாகலை - பிபிலை, தியகாம்பல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வினிதா சந்திராவதி (வயது 87), அவரது கணவரான எம்.எம்.தர்மசேன (வயது 87) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இருவருக்கும் இன்று மாலை ஒரே நேரத்தில் பிபிலை பொது மயானத்தில் இறுதிக் கிரியை நடத்த பிரதேசவாசிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

வினிதாசந்திராவதி நோய்வாய்ப்பட்டு, பிபிலை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

எனினும், சிகிச்சை பயனில்லாமல் அவர் நேற்று மரணமானார். இந்த நிலையில் மனைவியின் மரண செய்தியை அறிந்தவுடனேயே கணவனும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவமானது அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.