ஆசாத் சாலி தொடர்பாக, விசாரணை ஆரம்பம்
சில நீதிபதிகள் அடிப்படைவாத அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளமை தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று -26- அறிவித்துள்ளனர்.
அசாத் சாலியின் இந்த தகவல் மூலம் மத மற்றும் இனங்களுக்கு இடையில், பகையை ஏற்படுத்தும் எனக் கூறி, சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய முன்னாள் ஆளுநருக்கு எதிராக இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் கூறியுள்ளனர்.
கடந்த மே மாதம் 4 ஆம் திகதி அசாத் சாலி வெளியிட்ட இந்த தகவல் தொடர்பான செய்தியுடன் சம்பந்தப்பட்ட தொகுக்கப்படாத காணொளியை திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினருக்கு வழங்குமாறு, சம்பந்தப்பட்ட இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment