Header Ads



தற்கொலை குண்டுதாக்குதலில் பயியான ஆசாதின் சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் கண்டெடுக்கப்பட்ட தலை மற்றும் சிதறுண்ட உடல் பாகங்கள் அடையாளம் காணாத நிலையில் அது தற்கொலையாளி முகமது நாசார் முகமது ஆசாத் என்பவருடையது என அவரின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட மரபண பரிசோதனையில் தெரிய வந்தது. 

இதை அடுத்து அந்த உடலை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டு நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (07) கட்டளை பிறப்பித்துள்ளது. 

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் பக்கத்து வீட்டின் கூரையின் மேல் இருந்து மீட்கப்பட்ட தலை மற்றும் இரண்டு கால்கள் கொண்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. 

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

இந்த நிலையில் அடையாளம் காணாத நிலையில் மீட்கப்பட்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தொடர்ந்தும் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அடையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலையாளியான 34 வயதுடைய முகமது நாசார் முகமது ஆசாத் என தெரியவந்தது. 

இதனை அடுத்து இவரின் தாயாரான 54 வயதுடைய அலியார் லதீபர் பிவி கைது செய்யப்பட்ட நிலையில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானுக்கு முன்னாள் குறித்த சடலத்தை தனது மகன் என அடையாளம் காட்டியதை அடுத்து இது குண்டு தாக்குதலால் ஏற்பட்ட மரணம் எனவும் உயிரிழந்தவரின் தாயாரின் மாதிரி இரத்தத்தை பெற்று மரபணு பரிசோதணைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். 

அரச இரசாயனவியல், பகுப்பாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு இந்த உடற் கூறுகள் ஆசாத்தின் உடற் கூறுகள் என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்து. இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டபோது குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆஜராகி இரசாயனவியல் பகுப்பாய்வு திணைக்களம் அனுப்பிய மரபணு பரிசோதனை அறிக்கைளை நீதவானிடம் ஒப்படைத்தனர். 

இந்த உடற் கூறின் தலையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு அரசாங்க அதிபருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார். 

(சரவணன்)

No comments

Powered by Blogger.