Header Ads



கோறளைப்பற்றில் திறந்த வெளியிலான பெருநாள் தொழுகை


- எஸ்.எம்.எம்.முர்ஷித் -

நோன்பு பெருநாளை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மஸ்ஜிதுல் பறகாத் பள்ளிவாயல் நிருவாகம் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலான பெருநாள் தொழுகையும், கொத்பா பேருரையும் பள்ளிவாயல் முற்றத்தில் இன்று (06.05.2019) புதன்கிழமை  காலை இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும், கொத்பா பேருரையையும் மௌலவி ஏ.ஏ.எம்.ஜெமீல் நடாத்தியதுடன், வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாவடிச்சேனை, செம்மண்ணோடை, போன்ற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதன்போது இனநல்லுறவுக்காக விஷேட பிரார்த்தனையும் இடம்பெற்றதுடன், பின்னர் கலந்து கொண்டவர்கள் முஸாபா செய்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.