Header Ads



பன்னலை ஆடைத் தொழிற்சாலையில் தீ

பன்னலை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இன்று (14) அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை 01.30 மணியளவில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை அணைக்கும் பணி இன்று காலை வரையில் இடம்பெற்றதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார். 

தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ அலுவலக கட்டிடத்திற்கும் தைக்கும் இடத்திற்கும் பரவியுள்ளது. 

இதனையடுத்து தொழிற்சாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் வழங்கிய தகவலையடுத்து நீர்கொழும்பு மற்றும் குருணாகல் தீயணைப்பு படையினர் வருகை தந்து தீயை அணைக்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். 

குறித்த தொழிற்சாலையில் சுமார் 3000 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும், தீப்பரவல் ஏற்பட்ட சமயம் யாரும் அங்கு இருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.