Header Ads



அக்கா மகளின் திருமணத்தை, அரச செலவில் நடத்திய விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச 8 ஆம் வகுப்பு வரை படித்தவர் எனவும் அதனை அவர் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

விமல் வீரவங்ச என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தற்போதைய அரசாங்கத்தின் தவறு காரணமாகவே வீரவங்ச வெளியில் இருக்கின்றார்.

அவர் வெலிகடை சிறையில் இருக்க வேண்டிய நபர். வீடமைப்பு அதிகார சபையின் பணத்தை தனது குடும்பத்தினருக்காக செலவிட்டவர். உறவினர்களுக்கு வீடுகளை வழங்கியவர்.

இதனை நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரில் கூறும் போது, வீரவங்ச பதில் எதனையும் கூறவில்லை. அத்துடன் தனது அக்காவின் மகளது திருமணத்தை வீடமைப்பு அதிகார சபையின் பணத்தில் நடத்தினர்.

எந்த அமைச்சராவது அரசாங்கத்தின் பணத்தில் இப்படி திருமணங்களை நடத்தியுள்ளனரா எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

1 comment:

  1. விமல் வீரவங்ச 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படவேண்டிய விடயம்;. இதிலிருந்து நாங்கள் எமது நாட்டு மக்களின் அறிவு, சிந்திக்கும் ஆற்றல் என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கு முன்னர் இந்தியா போன்ற நாடுகளில் இருந்த (இருக்கும்) எத்தனையோ அரசியல்வாதிகள் 5 ஆம் வகுப்பு வரை கூடப் படிக்காதவர்கள்தான் என்பதனையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.