Header Ads



ஹிஸ்புல்லா இராஜினாமா செய்தது கவலை அளிப்பதாக, எந்த தமிழனும் அறிக்கை விடட்டுமே..?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்  வழங்கிய பேட்டி

கேள்வி : முஸ்லிம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி துறப்பு இலங்கையில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கின்றீர்களா? 

பதில் : எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

 கேள்வி : இதனால் தமிழ் மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுமா? 

பதில் : எந்தவொரு பாதிப்பும் இவர்கள் பதவி துறந்ததனால் தமிழ் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை, நன்மைகள்தான் ஏற்படும். ஏனெனில், பதவி துறந்த இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட ‘அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் வேலைவாய்ப்பு வழங்கிய விடயங்களிலும், பாரபட்சம் காட்டினார்கள். எமது கிழக்கிலுள்ள எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாலும், இதனைத் துணிச்சலுடன் கூறுமுடியுமா? அவ்வாறு பாரபட்சம் இல்லை என எந்த தமிழ் அரசியல்வாதிகளும் சொல்வார்களேயானால் நான் 24மணித்தியாலத்தில் எனது பதவியைத் துறப்பேன்.! 

மாவட்ட அபிவிருத்திக் குழுப் பதவியை வைத்துத்தான் நீதிபதியை மாற்றினேன் என ஹிஸ்புல்லா தெரிவித்திருந்தார். தென்னிலங்கையிலுள்ள தமிழ் தலைமைத்துவங்கள் கிழக்கில் வந்து ஒரு மாதம் வாழ்ந்து பார்க்க வேண்டும். அதன்பின்னர்தான் கிழக்கு மாகாணத்தைப் பற்றிக் கதைக்க வேண்டும். 

இதுவரைக்கும் 28இந்துக் கோயில்கள் அம்பாறை மாவட்டத்தில் இல்லாமல் போயிருக்கின்றன. 8தமிழ் கிராமங்கள் வெளிப் பிரதேசங்களுக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களிடத்தில் சுமார் 10இலட்சத்திற்கு போகக்கூடிய காணிகளை 50இலட்சம் கொடுத்து வாங்குகின்றார்கள், ஹிஸ்புல்லாவிள் ஹிரா பௌண்டேசனுக்கு இவ்வாறு பல ஏக்கர் காணிகள் உள்ளன. சாதாரண முஸ்லிம் மக்களிடத்தில் இவ்வாறு காசு இல்லை. இதனை அப்பாவி முஸ்லிம் மக்கள் விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும். மேலும் சிங்களவர்களோடு நின்றுதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் இவ்வாறான வேலைத்திட்டங்களை மேற்கொள்கின்றார்கள். 

கேள்வி : இனங்களுக்கிடையில் அரசியல் தலைமைகள் முட்டிக்கொள்ளும் போது அப்பாவி பொதுமக்களின் இன நல்லுறவு பாதிக்கப்படுகின்றதே? 

பதில் : ஒற்றுமையாக வாழ்ந்து வந்த மக்களிடையே காணப்பட்ட இன நல்லுறவைக் குலைத்தது யார்? ஏப்ரல் 21இற்கு முன்பும்தான், அதற்குப் பின்னருந்தான், அரசியல் ரீதியாகவும்தான்.. இன நல்லுறவைச் சீர்குலைத்தது யார்? முஸ்லிம் தீவிரவாதி சஹரான் தலைமையிலான குழு ஏன் தமிழ் பக்தர்கள் செல்லக் கூடிய தேவாலயங்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள்? நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்களை எதிர்த்தால், அவர்களது வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் அல்லவா? 30வருட கால யுத்தத்தில் நொந்துபோய் இருக்கும் தமிழ் சமூகத்தில் கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்பதனால்தான் தமிழ் மக்களைக் குறி வைத்து தாக்கினார்கள். 

கேள்வி : இன நல்லிணக்கம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்? 

பதில் : நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களுக்கு எதிராவனன் கிடையாது. அப்பாவி முஸ்லிம் மக்களை நான் ஒருபோதும் குறைகூற மாட்டேன். ஆனால், அவ்வாறான முஸ்லிம் மக்களை வைத்து அவர்களின் தலைவர்கள் அரசியல் செய்கின்றார்கள். யாராவது சொல்லட்டும், நான் எங்கேயாவது முஸ்லிம்களுக்கு எதிராக கதைத்திருக்கின்றேன் என்று! ஒருபோதும் கிடையாது. முஸ்லிம் அரசியல்வாதிகளை சுட்டிக்காட்டுகின்ற போது அதனை ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தாக கொண்டு செல்கிறார்கள் இதனை முஸ்லிம் சமூகம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இது முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் ஆபத்தாக வந்துமுடியும். 

நல்லாட்சி அரசாங்கத்தில் வாகனேரி தொடக்கம் 11இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்டன. மாடுகளை வெட்டி ஆலயத்தின் மூலஸ்த்தானத்தில் போடப்பட்டிருந்தன. இதனை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று சொல்லா விட்டாலும், தமிழர்களின் புனித ஸ்தலத்தினுள் மாடுகளை வெட்டி போட்டது பிழை என எந்த முஸ்லிம் அமைப்புக்களோ, அரசியல்வாதிகளோ கருத்துத் தெரிவிக்கவில்லை. 

எனவே முஸ்லிம் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து பேசி தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோல் தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனை சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும், அதுபோலத்தான் சிங்கள மக்கள் மத்தியிலும் செயற்பட வேண்டும், அப்போதுதான், இலங்கையில் முறையான நிலையான நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட முடியும். எப்போது ஒருவர் தான் சார்ந்த மதத்தைப்போல் பிற மதங்களையும் நேசிக்கின்றாரோ அங்குதான் நல்லிணக்கம் உதயமாகின்றது’ நான் ஒரு கிறிஸ்தவன். ஆனால் நான் இந்துக் கோயிலுக்குச் செல்கின்றேன், அங்கு அடிக்கல் நட்டு வைக்கின்றேன். 

கேள்வி : பல கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் பதவி துறந்தார்கள். அதுபோலவே தமிழ் அரசியல்வாதிகள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இலங்கையில் பல விடயங்களைச் சாதித்திருக்கலாம் என தமிழ் மக்கள் தெரிவிக்கின்றார்களே! இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 

பதில் : அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமில்லாத நிலையிலும் யுத்த காலத்தில் எமது மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னரும், அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருந்தோம், ஆனால், அப்போது அரசாங்கத்திடம் எதுவும் பேரம் பேசவில்லை, 2015ஆம் ஆண்டிலிருந்தாவது நல்லாட்சி அரசாங்கத்தை சரியாகப் பயன்படுத்தியிருந்தால் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்திருக்கலாம், அரசியல் தீர்வு பெற்றிருக்கலாம். இது பற்றி பலமுறை சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தபோது “சின்னச் சின்ன விடயங்களைக் கேட்டு பெரிய விடயங்களை நாங்கள் இழக்க முடியாது. நாங்கள் அரசியல் தீர்வை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றோம்” எனத் தெரிவித்தார். இறுதியில் சிறிய விடயமும், இல்லை பெரிய விடயமும் இல்லை என்றாகி விட்டது. 

பேரம்பேசக்கூடிய அரசியல் சாணக்கியம், எமது மக்களுக்காக களத்தில் இறங்கக் கூடிய தன்மை, தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் இல்லை, வெறும் கதையாடுவதே எம்மவர்களிடத்தில் காணப்படுகின்றது. அதுதான் அவர்களுக்கும் இலகுவான அரசியலாக காணப்படுகின்றது. 

குறிப்பாக, முன்னாள் ஆளுனர் இராஜினாமா செய்தது தமக்கு கவலை அளிப்பதாக கிழக்கிலுள்ள எந்த தமிழனும் அறிக்கை விடட்டுமே! யாரும் செய்ய மாட்டார்கள். ஏனெனில் எமது மக்களின் உள்ளங்களை தொடும் அளவிற்கு யாரும் பணி செய்யவில்லை.

எனவே எமது தமிழ் மக்களைப் திருப்திப்படுத்தக் கூடிய வேலைகளைத்தான் எமது தமிழ் அரசியல்வாதிகள் இனிமேலாவது மேற்கொள்ள வேண்டும். இனவாதம் நமக்கு வேண்டாம், இனவாதம் இல்லாமல் நாங்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும்.    

நேர்கண்டவர்  வ. சக்திவேல்

6 comments:

  1. இவனெல்லாம் ஒரு ஆளன்று...😁😁😁

    ReplyDelete
  2. கேள்வியும் யாமே பதிலும் யாமே!

    ReplyDelete
  3. கொலைகார புலி.

    ReplyDelete
  4. நல்லிணக்கத்தை பற்றி கேட்க வேறு ஆள் இல்லையா தமிழ் கட்சிலிருந்து பல்டி அடித்தவரிடம் தமிழர்களைப்பற்றி கேட்கிறீர்களே.

    ReplyDelete
  5. ஹிஸ்புல்லாவும் , றிஸாத்தும் எங்கிருந்து பல்டி அடித்தவர்கள்.

    ReplyDelete
  6. @Rizard, அப்போ, நீங்க என்ன கொலைகார iSIS போல

    ReplyDelete

Powered by Blogger.