Header Ads



"அமைதியின்மையை ஏற்படுத்திய ரதன தேரரை, உடனடியாக கைதுசெய்ய வேண்டும்"


அத்துரலியே ரதன தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டுமென நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

ஆளுநர்களாக பதவி வகித்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அஸாத் சாலி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரை பதவியிலிருந்து விலக்கக்கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டதன் மூலம் அரசியல் அமைதியின்மையை ஏற்படுத்தியால் அத்துரலியே ரதன தேரரை கைது செய்ய வேண்டுமென விக்கிரமாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

“சட்டத்தின்படி, எவரும் உயிரை மாய்த்துக்கொள்ள அனுமதியில்லை. எவரும் அப்படி செய்ய முயற்சித்து உயிர் தப்பினால் அவரை கைது செய்து வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும். ரதன தேரர் விடயத்திலும் இதுவே நடைபெற வேண்டும்”என அவர் கூறியுள்ளார். Metro

2 comments:

  1. why the emergency order being blind infront of extremism? is it working against innocents only?? is there any differentiation in the legislation or country's law between majority and minority???

    ReplyDelete
  2. Arrest him under Emergency Law. Racist trouble maker.. Terror Monk.

    ReplyDelete

Powered by Blogger.